Showing posts with label chennai temples. Show all posts
Showing posts with label chennai temples. Show all posts

21.7.18

Sri Thyagaraja swamy, vadivudaiyambigai Temple- Thiruvottiyur

அருள்மிகு வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி திருக்கோயில் - திருவொற்றியூர் 




முகப்பு கோபுரம் 

மூலவர் - படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர் 
தாயார் - வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன் 
விருச்சம் - மகிழம் ,அத்தி 
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம் 
ஆகமம் - காரணம் ,காமீகம் 
ஊர் - திருவொற்றியூர் 
கொடிமரம் 

* இங்கு எல்லாமே இரண்டு சுவாமி ,அம்பாள் ,தீர்த்தம் ,பூஜை ,விருச்சகம் இவை எல்லாமே இரண்டு ஆகையால் இரண்டு என்பது பிரதானமானது 

* தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 253வது தலம் 

* சுயம்பு லிங்கம் ,ஆவுடையார் கிடையாது 

* இங்கு பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார் 

* துர்க்கை காலின் கீழ் மகிஷாசுரன் இல்லை 

* அம்மனின் 51 சக்தி பீடங்கலில் இது இஷி சக்தி பீடமாகும் 

*பிரமனின் விருப்பத்திற்கேற்ப ஈஸ்வரன் மண்ணுலகில் எழுந்தருளிய முதல் திருத்தலம் 
வட்டப்பாறை அம்மன் 

*ஏழாம் நூற்றாண்டில் காளியின் வடிவமாக உள்ள வட்டப்பாறை அம்மனை தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட தலம் .

* ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை விளக்கும் திருமூர்த்திகளின் ஓர் வடிவம் பெற்ற தலம் 

* பஞ்சபூத தலங்கள் ஒரே இடத்தில அமைந்த தலம் 

* ஆதிசேஷன் மற்றும் சந்திரன் ஒருங்கே நின்று சிவனை வழிபட்ட தலம் 

* அகத்தியர் இறைவனின் திருமணக்கோலத்தை கண்டு களித்த தலம் .

* இலவன் பிரதோஷ நாளில் சிவனை வழிபட்ட தலம் 

* நந்தியம் பெருமானுக்காக சிவன் பத்மதாண்டவம் ஆடிய தலம் .

*திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம் .

* சுந்தரர் சங்கிலி நாச்சியாரை சிவபெருமான் முன்னிலையில் மணம் புரிந்த சிறப்புமிக்க தலம் .

* ஆதிபுரி  என்பது இவூரின் பழம் பெறும் பெயராகும் 

* அருணகிரிநாதர் ,வள்ளலார் ,பட்டிணத்தார் ,பாம்பன் அடிகளார் போன்ற இருபது அருளாளர்கள் போற்றி பாடிய தலம் 

* தெய்வங்கள் ,முனிவர்கள் ,தேர்வர்கள் மற்றும் ஆறு அரசர்கள் வழிபட்ட தலம் 

*27 நட்சத்திர லிங்கங்களை கொண்ட தலம் 

* திருவொற்றியூரை நினைத்தாலே வினைகள் நீங்கும் .

 அருள்மிகு வடிவுடையாம்பிகை 

வடிவுடையம்மன் கோயில் 

வடிவுடைநாயகியை கண்குளிர கண்டு கைகூப்பி வணங்கினால் நல்ல மனைவியும் ,நல்ல கணவனும் ,நல்ல குழந்தை செல்வமும் கிடைக்கும் .செல்வ செழிப்போடு வாழ்வர் .

இவர்  இங்கு இஷி சக்தி (ஞான சக்தியாக ) அருள்புரிகிறார் . 51 சக்தி பீடங்களில் இத்தளம் இஷி சக்தி பீடமாகும் .

மூவுலகை ஆளுகின்ற அன்னை ஆதி பராசக்தி நம்மவர்களுக்கு தாயக ஆள்கிறார் .இவர் இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி  என முப்பெரும் தேவியாக அருள்பாலித்து வருகிறார் .
சென்னையில் இவர் மூன்று இடங்களில் இவ் சக்திகளாக காட்சிதருகிறார் இவர்களை பவுர்ணமியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வரும் நாளில் ஒரே நாளில் தரிசனம் செய்தல் வாழ்க்கை செம்மயாகவும் ,ஒளிமயமாகவும் விளங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

1. திருவுடையம்மன் -இச்சை சக்தி - மேலூர் (மீஞ்சூர் )-அதிகாலை தரிசனம் 

2. வடிவுடையம்மன் -ஞான சக்தி -திருவொற்றியூர் -உச்சிவேளை தரிசனம் 

3. கொடியுடையம்மன் - கிரியா சக்தி - திருமுல்லைவாயல் -மாலை தரிசனம் 
For more details 

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் 

மத்திய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை 

அருகில் பட்டினத்தார் அடிகளாரின்  ஜீவ சமாதி உள்ளது இந்த இடத்தை பற்றி பின்னர் எழுதிகிறேன் 
நன்றி - தல வரலாறு தொகுப்பு 













7.7.18

Sri Kothandaramar Temple - West Mambalam,Chennai

அருள்மிகு கோதண்டராமர் கோயில் - மேற்கு மாம்பலம் , சென்னை 

மூலவர் : ஸ்ரீ   கோதண்டராமர் 
தாயார்  :  அரங்கநாயகி தாயார் 



* 200 வருட பழமை வாய்ந்தது 
* மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் இலக்குவன் குடை பிடிக்க சிறிய திருவடியாக ஹனுமான் ஸ்ரீராமரின் பாதங்களை தாங்கி பிடிக்க இப்படியொரு பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார் .
*இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .
* பரபரப்பான மாம்பழம் ரயில் நிலையம் அருகில் மிக அமைதியாக இருக்கிறது இந்த திருக்கோயில் .
* கோவில் உள்ளே ரெங்கநாதருக்கு தனி சன்னதி உள்ளது . மஹாசம்ப்ரோக்ஷனை சமயத்தில் திருநீர்மலை ஸ்ரீ ரெங்கநாதர் இங்கு எழுந்தருளி மங்களாசனம் செய்தார் 
* இங்கு  உள்ள ஹனுமானுக்கு சஞ்சீவி பர்வத ஆஞ்சிநேயர் என்று பெயர் . அவர் பர்வத மலையை சுமந்தபடி இங்கு காட்சியளிக்கிறார் .

செல்லும் வழி :

மாம்பழம் ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் உள்ளது .

காணொளியில் காண கிழே உள்ள வீடியோவை  காணவும் 




15.5.18

Arulmigu Kapaleeshwarar Temple- Mylapore, Chennai

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர் (திருமயிலை )


நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும் 

ராஜ கோபுரம் 

தேவாரம் பாடல் பெற்ற தல எண்  213


இறைவன்: கபாலீஸ்வரர்.

அம்பாள் : கற்பகாம்பாள்.

தல விருட்சம்: புன்னை மரம்.

தல தீர்த்தம்: கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்.

ஆகமம்: காமிக ஆகமம்.

ஆலயப் பழமை: ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.
இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.





கோவில் அமைப்பு:
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்டு இவ்வாலயம், சென்னை நகரின் நடுப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே பிரதான இராஜகோபுரம்.
ஏழு நிலைகளைத் தாங்கியபடி சுமார் நூற்று இருபது அடி உயரம் வரை இருக்கும் எனத் தோன்றுகின்றதது.




தல அருமை:
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன.

இதனால் தானும், சிவனுக்கு ஈடானவன் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.

பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து போவது இயல்பு.

மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மாவை ஈசனால் படைக்கப்படுவார்.

ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.

சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்தார் சிவபெருமான்.

அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார்.

ஆகவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு *கபாலீஸ்வரர்* ஆனார்.

தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.
தல விருச்சம் 


# அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தாள்.
சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார்.

# இதுவே, புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறதைக் காணமுடிந்தது. 

# இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது.

 #வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார்.

# தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார்.

# தேவியர்கள் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

# திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது பத்து பாடல்கள் பாடப்பெற்றிருக்கிறது.

தல பெருமை:
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள்.

சிவனும் உபதேசிக்க முனைப்பெடுத்து, உபதேசத்தை அருளிக்கொண்டிருந்த சமயத்தில்........

அவ்வேளையில் அங்கு மயில் ஒன்று நடனமாடவே, அந்த மயிலைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் மயில் நடனத்தை வேடிக்கை பார்த்தாள்.

பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பதுதானே இயல்பு.

அதனால், குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதாவாகவே பிற! என்று மயிலாக மாறும்படி செய்து சபித்து விட்டார்.

தன் நிலை குற்றத்தைப் புரிந்து கொண்ட அம்பிகை, தன் குற்றத்திற்கு விமோசனம் கூறுமாறு கேட்டாள்.

அதற்கு ஈசன், நீ பூலோகத்தில் என்னை மயில் வடிவில் வந்து வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார். 

அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
இருப்பிடம்:
சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மைலாப்பூர்,
சென்னை,
PIN - 600 004

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

நன்றி : திரு .கருப்புசாமி 

8.3.18

Arulmigu Vaikundavasa perumal temple, koyembedu

அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் 

முகப்பு தோற்றம் 




மூலவர் - வைகுண்டவாசர் 

உற்சவர் :  பக்தவச்சலர் 

தாயார் - கனகவல்லி தாயார் 

விருச்சகம் - வில்வம் , வேம்பு 

தீர்த்தம் -  லவசதீர்த்தம் 

புராண பெயர் : குசலவபுரி 





தல சிறப்பு :

*  வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .

* வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர் 

* இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் 

* இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது 

* அனுமன்,லக்ஷ்மணன்  இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .

* கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .

* இங்குள்ள விமானம் சாயா விமானம் .

கோவில் அமைவிடம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது .
காலை  6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு  8.45 வரை .

If you want English please click

7.3.18

Arulmigu Kurungaleeswarar temple, koyambedu

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு 

மூலவர் : குறுங்காலீஸ்வரர் 

தாயார் :  ஸ்ரீ தர்ம சம்வர்தனி 

விருச்சகம் :  வில்வம் 



கோவில் சிறப்பு :

*  வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவில் ஆதலால் மோட்ச தலமாக கருதப்படுகிறது . பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தளம் ஆகும்.

*  அம்பாள் தன் இடது காலை முன் வைத்த வண்ணமாக காட்சியளிக்கிறார் 

* அம்மன் சன்னதி தூணில் ஜூகுணு மஹரிஷி திருவுருவம் இருப்பது சிறப்பு 

* நூதன பஞ்சவர்ண நவகிரக சன்னதி ஒன்று சதுர மேடையில் தாமரையை ஓதவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

*  தாமரை நடுவில் சூரியன் தன் மனைவி உஷா மற்றும் ப்ரதுஷ்டா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நிற்கிறார் . தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர் .

* இங்குள்ள தூண்களில் ராமாயண காட்சிகள் மிக அழிகிய வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டுள்ளது .

* கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தூணில் சரபேஸ்வரர் வீற்றியுள்ளார் . அவருக்கு ஞாயிறு கிழமை ராகு காலத்தில் சிறப்பான பூஜை நடைபெறுகிறது .

*  லவன் ,குசன் பிறந்து விளையாடிய இடம் மற்றும் ராமன் சீதைக்காக அஸ்வமேதை யாகம் நடத்திய குதிரையை லவன் மற்றும் குசன் இங்குதான் கட்டி போட்டதாகவும் அதை மீட்க ராமன் அவர்களிடம் போரிட்டதாகவும் வால்மீகி அவர்கள் அதை தடுத்து இவர் தான் உங்களுடைய தந்தை என்று லவன் ,குசேலனிடம் சொன்னார் ஆதலால் பித்ரு தோஷம் போக்க ராமர் இவ் சிவனை வணங்கி பித்ரு தோஷம் போக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

* இக்கோவிலின் அருகிலேயே வைகுண்டவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது இவூரின் சிறப்பு . 

* கோ என்ற அரசன்  ராமன் குதிரைகளை அயம் என்ற இரும்பு  வேலியில் கடியதுதான் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது பேடு என்றால் வேலி என்று பொருள் .  



அமைவிடம் :

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பாலம் அருகில் உள்ளது . மற்றும் கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ளது .காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 8.45 வரை கோவில் திறந்திருக்கும் .


If you need English  please click






13.2.18

Arulmighu Thiruvalythayam Tiruvalleswarar Temple- Padi

வலிதாய நாதர் திருக்கோவில், திருவலிதாயம், பாடி (சென்னை)

_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.




இறைவன்:

 வலிதாய நாதர், வல்லீஸ்வரர்.
இறைவி: ஜகதாம்பாள், தாயம்மை.

தல விருட்சம்: பாதிரி மரம், கொன்றை.

தல தீர்த்தம்: பரத்வாஜ் தீர்த்தம்.
ஆகமம்: காமீகம்.
ஆலயப் பழமை:  2000 ஆண்டுகள் முற்பட்டது 

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.



பெயர்க்காரணம்:

பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.



அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு இருந்தது.

ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் இருந்தது.

அம்பாள் உருவம் ஒரு காலத்தில் பின்னப்பட, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னமான மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்து விட்டதாக சொன்னார்.


பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் இருந்தது. கைதொழுது வணங்கிக் கொண்டோம்.



பாரத்வாஜ தீர்த்தம்:
ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி உருவம் பெற நேர்ந்தது.

சாபம் நீங்கப் பெற்றார் அவர் (கருங்குருவி) திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார்.

நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறானது அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது என்பர்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும்.

ஆனால், நல்ல வரன் அமைய வியாழக் கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

தல சிறப்பு:

இக்கோவிலில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றவராவார்.

அதனால் சென்னையில் உள்ள ஓர் குரு தலமாகவும் திகழ்கிறது.

திருமால், அனுமன், சுக்ரீவன், ராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் இது.

அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தப் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலமும் இது.

தல பெருமை:

திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது.

வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் ஆகியோர் பிள்ளைகளாக பிறந்தார்கள்.

பரத்வாஜர் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார்.

அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார்.

லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார்.

இதனால் இத்தலத்தில் புறாக்கள் அதிகம் காணப்பெறலாம்.

எனவே தான், இத்தலம் “திருவலிதாயம்”என்றும் சிவன் “வலியநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.




இத்திருத்தலத்தில் சாப விமோசனம் பெற்றவர்களின் பட்டியல் அகத்தியர் , சந்திரன் , யமன் , அக்னி , ராமர் , அனுமான் ,லவகுசர்கள் , மன்மதன் , இந்திரன் திருமால் என நீளுகிறது.

இது வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது குருஸ்தலமாகவும் விளங்குகிறது.

இங்கு குருவுக்கென்று தனி சன்னதி ஒன்றும் சமீபத்தில் கட்டப் பட்டுள்ளது.

மேலும் இத்திருத்தலத்தில் எழுந்தளியுள்ள எம்பெருமானுக்கு திருவல்லீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணத்தையும் விளக்கினார் குருக்கள்.

ஒரு முறை பிரம்மாவின் புதல்விகளான கமலை , வல்லி என்பவர்கள் சிவனையே மணாளனாக அடைய நினைத்து தவமியற்றினர்.

அதைத் தெரிந்து கொண்ட சிவ பிரான் தான் சக்திக்கு ஒரு பாதி உடலை அளித்து விட்டதால் அவர்களை மணக்க இயலாத நிலையில் உள்ளதாக எடுத்துக் கூறினார்.

இதில் உள்ள உண்மையை உணர்ந்த அவர்கள் சிவபெருமனைவிடப் புகழில் சற்றும் குறையாத அவரது மகனான விநாகரைத் திருமணம் செய்து கொண்ட இடமாதலால் இங்குள்ள ஈஸ்வரர் , திருவல்லீஸ்வரர் என அழைக்கப் படுகிறார் என்றும் தெரிவித்தார்.

திருஞான சம்பந்தர் மட்டுமல்ல , அருணகிரியார் தான் பாடிய திருப்புகழிலும் திருவலிதாயத்தில் குடி கொண்டுள்ள எம்பிரான் முருகனை, மருமல்லியார்... எனத் தொடங்கும் பாடலின் மூலம் வணங்கியுள்ளார்.

மேலும், கருணையின் மறு வடிவமாகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார் , திருவருட்பாவில் இங்குள்ள ஈசனை.......

சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கது என் கொலோ!
எனக் கசிந்துருகுகிறார்.

மேலும் இவர் வலிதாய நாதன் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

மிகவும் பழம் பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் முதலில் வெறும் மரத்தடிக் கோயிலாகவும் , பின்னர் மரக் கோயிலாகவும் இருந்திருக்கிறது.

சோழர் காலத்தில் தான் கற்கோயில் கட்டப்பட்டது என்பதை இங்கேயுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இங்கே முந்தைய காலங்களில் ஆயர் குலத்தவர் அதிகம் வசித்து வந்த்தால் பாடி என்னும் பெயர் பெற்றது என்கின்றனர்.


*பாடலின் மேன்மை:*
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற புகழை உடையது இந்தத் திருத்தலம்.

பத்தரோடு ... எனத் தொடங்கி பத்து பாடல்கள் இயற்றியுள்ளார்.

இவ்வாறு பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பிற்கு தமிழ் இலக்கணம் இட்டிருக்கும் பெயர் தான் பதிகம்.

அவர் இறைவனை வலிதாய நாதர் எனவும் இறைவியை தாயம்மை எனவும்  பாடியிருக்கிறார்.

ஆனால் அர்ச்சனையில் இறைவனை திருவல்லீஸ்வர ஸ்வாமி என்றும் அம்பிகையை ஸ்ரீ ஜகதாம்பிகா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

*சம்பந்தர் தேவாரம்*
பண் :நட்டபாடை

1.பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.



2.படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.


3.ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.



4.ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்
புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.


5.புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.



6.ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.



7.கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.


8.கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.



9.பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.


10.ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.



11.வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.


திருவிழாக்கள்:

சித்திரையில் பிரமோற்சவம்,
தை கிருத்திகை,
குரு பெயர்ச்சி.


ஆலயப் பூஜை காலம்:

தினமும் காலை 7.00 மணி முதல் 12.00  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

 இருப்பிடம் 

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது.

சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்.
*தொடர்புக்கு:*
044- 26540706

நன்றி -  கு . கருப்புசாமி 

30.12.17

Marurnheeswarar Temple- Thiruvanmayur


மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்

__________________________________________



 மூலவர் -ம ருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர்.

அம்பாள் - திரிபுரசுந்தரி, சொக்க நாயகி.

தல விருட்சம்- வன்னிமரம்.

தல தீர்த்தம்- பாபநாசினி, அமுதவால்மீகி.

தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 214


தல வரலாறு 





கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது.

இதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார்.

தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார்.

அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார்.

அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார்.

இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார்.

அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார்.

சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.

வன்னி மரம் 

வன்னி மரம் 


ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும்.

இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம்.

வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில்தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன.

அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.

இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாளில் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஆலய சிறப்பு:




ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. 

அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார்.

அதன்படியே இத்தலம் வந்து வழிபாடு செய்து, ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு.

பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் *பால்வண்ண நாதர்* என்று பெயர் பெற்றார்.

அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்களைப் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகளைப் பற்றியும் ஈசன் இவருக்கு உபதேசித்தருளினார்.

அதன் காரணமாகவே ஈசனை, *மருந்தீஸ்வரர், ஔஷதநாதர்* (ஔஷதம் என்றால் மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்கள்.


காலம் அறிய முடியாத அந்தக்காலத்தில், அகத்தியருக்கு வந்த வயிற்றுவலியை நீக்க சித்த மருத்துவ முறைகளை, சித்துக்களின் நாயகராம் சிவனாரே வந்து போதித்த இடம்தான் திருவான்மியூர். தலம்.

இங்கு இருப்பவரே மருந்தீஸ்வரர், மருத்துவர், நோயொழிப்பவர்,  நோய்வராதும் காப்பவர். இவரைப் பார்க்கச் செல்ல பணமேது என்பார்கள் சிலர்.

திருவான்மியூர் மருத்துவரை (மருந்தீஸ்வரர் வைத்தியர்.) ஒரு முறை  தரிசிக்கச் செல்லுங்கள்.

அகிலத்தின் நாயகனாம் மருந்தீஸ்வரர் என்ற இறைவன், ஓர் ஆவின் பாலை உண்டு செழித்து கிளர்தெழுந்து நின்ற இடம்தான் இந்த திருவான்மியூர்.

வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காமதேனு, சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் செல்ல சபிக்கப்பட்டது.

சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு.

ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டுகொண்டது.

பாவம் நீங்க, பாலைச் சொரிந்து வழிபட்டது. ஈசனின் மீது கொண்ட பக்தியின் அவசர மேலீட்டால், லிங்கத் திருமேனி மீது தவறி கால்பட, அதை இன்றும் திருத்தழும்பாக ஏற்றுக்கொண்டு பால்வண்ண நாதராக, அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலமே திருவான்மியூர்.

வான்மீகம் என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது *வான்மிகியூர்* என வரலாறு உரைக்கிறது.

ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் என்கிறது.

அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

தொண்டை மண்டலத்தின் வெகு சிறப்பான பதினெட்டு கிராமங்களில் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது.

இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது.

கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... என பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருக்கிறது.

சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது.

அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு *சொக்கநாயகி* எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள்

மனமுருகி தன்னைத் தொழுவோரிடம் பேசும் சக்திகொண்டவள் இந்த அன்னை.

பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி.

அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர். 

அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியதும், சித்த வைத்திய முறைகளைக் கேட்டு அறிந்ததும் இந்த ஆலயத்தின் வன்னி மரத்தின் அடியில்தான்.

இதனால், இந்த வன்னி மரத்தடியில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்ஸவத்தில் ஒன்பதாம் நாள் ஈசன் அகத்தியருக்குக் காட்சிதருகிறார்.

முக்கியத் திருவிழாவான நடராஜரின் நடனக்காட்சியையும் ஆண்டுதோறும் வால்மீகி முனிவருக்கு காட்சி விழா நடக்கும்.

குற்றாலத்துக்குப் பிறகு திருவான்மியூரில் நடக்கும் இந்த நடனத் திருவிழாவே இங்கு மிக சிறப்பானது.

சோழர்கால கல்வெட்டுகள் பதினாறைக் கொண்டுள்ள இந்தப் பழைமையான திருத்தலத்தைத் திருநாவுக்கரசர் பெருமான், திருஞானசம்பந்த பெருமான் என இருவராலும் பாடப்பெற்றது.

இங்கிருக்கும் மருந்தீஸ்வர பெருமான் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தரிசிக்க வந்த அப்பையதீக்ஷிதர் என்னும் பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கிய ஈசன், மேற்குப்புறமாகத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.

இன்று திருவான்மியூர் மார்க்கெட்டாக இருக்கும் பகுதி, அப்போது மங்கள ஏரியாக பெரும் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது, இங்கு வந்த அப்பையதீக்ஷிதர் தரிசிக்க இயலாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.

வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர்,
சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு தியாகராஜ பெருமான் என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார்.

நக்கீரர் உள்ளிட்ட பல புலவர்களாலும் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெருமான்.

அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க முக்கியமான பூஜைகள்.

இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக் கொண்டு நோய்
ஒழியப்படுகிறது.

சொல்லச் சொல்ல நீளும் இந்த திருத்தலத்து ஈசனையும் இறைவியையும், காணும்போதே உள்ளிருக்கும் நோய் குணமாகிவிடும் வைத்திய இறைவர்கள்.

இதை எழுத்தால் மட்டும் உணர முடியாது. ஒருமுறை சென்று தரிசித்துப் பாருங்கள்.

அதன் பிறகு மருந்தீஸ்வரரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறிவிடும் அதிசயத்தை உணரப்பெறுவீர்கள்.

வந்த நோய்க்கு மட்டுமல்ல, நோயே வராமல் காப்பதிலும் இவரே அதிசய வைத்தியர்.

தேவாரம் பாடியவர்கள்:


திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மொத்தம் மூன்று பதிகங்கள்.

இருப்பிடம்:

இந்தத் தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது.

சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.

திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.

அஞ்சல் முகவரி:

நிர்வாக அதிகாரி.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர்,
சென்னை.
PIN - 600 041

இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஆலயப் பூஜை காலம்:

தினமும் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


சம்பந்தர் தேவாரம்:

1. கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

2. சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் 
சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.

 3. கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.

.4. மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச் 
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

5. மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

6. போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம் 
தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

7. வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

8. தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

9. பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.

10. மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

11. மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே.


        .

திருவிழாக்கள்:

பங்குனி மாதத்தில் நடைபெறும் பத்து நாட்கள் பிரமோற்சவம் பெருவிழா.
ஏழாம் நாள் தேர்த்திருவிழா.
ஒன்பதாவது நாள் வன்னிமர சேவை.
பத்தாம் நாள் வான்மீகி முனிவருக்காக இறைவன் ஆடிய திருநடனம்.
பதினோராம் நாள் தெப்ப உற்சவம்.

தொடர்புக்கு:

044- 24410477

நன்றி - கோவை - குப்புசாமி அவர்கள் 

                                 திருச்சிற்றம்பலம்

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...