Showing posts with label 108 divya desams. Show all posts
Showing posts with label 108 divya desams. Show all posts

11.7.18

Sri Bhaktavatsala Perumal Temple- Thirunindravur

ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் - திருநின்றவூர் 



மூலவர் : பக்தவத்சல பெருமாள் 
தாயார் : என்னைப் பெற்ற தாயார் , சுதாவல்லி 
கோலம் : நின்ற கோலம் 
மங்களாசனம் - திருமங்கை ஆழ்வார் 
ஊர் - திருநின்றவூர் 
மாவட்டம் - திருவள்ளூர் 

* 58 வது திவ்ய தேசம் 

* லட்சுமி பிராட்டி ஒரு முறை வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து நின்றதால் திருநின்றவூர் என்று பெயர் பெற்றது .

* தாயார் இவூரின் அழகை கண்டு மீண்டும் வைகுண்டம் செல்ல விரும்பாமல் இங்கேயே இருந்தார் அப்போது அவருடைய தகப்பனார் சமுத்திரராஜன் அவரை என்னை பெற்ற தாயே என்று அழைத்த காரணத்தால் என்னைப் பெற்ற தாயார் என்று அழைக்கப்படும் ஒரே திவ்ய தலம் இதுவாகும் .

* குபேரர் தன் நிதியை இழந்து தவித்தபோது இங்கு வந்து என்னைப் பெற்ற தாயாரை வணங்கி தன் நிதிகளை பெற்றதால் இவர் இங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலக்ஷ்மியாகவும் காட்சி தருகிறார் .

* இங்கு ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது . இவரை வேண்டி பக்தர்கள் ராகு தோஷ நிவர்த்தி மற்றும் கல்யாண தடைகளிலிருந்து விடுபடுகிறார்கள் .



* சமுத்ரராஜன் மற்றும் வருணன் இருவரும் தாயாரை வைகுண்டத்திற்க்கு திரும்பவருமாறு அழைத்தும் அவர் மறுக்கிறார் உடனே இருவரும் திருமாலிடம் சென்று தாயாரை அழைத்துவர விண்ணப்பித்தனர் ,திருமாலும் மனமிறங்கி வைகுண்டம் விட்டு இத்தலம் வந்தார் .இவ்விருவரின் பக்திக்காக இங்கு வந்ததால் இவருக்கு பக்தவத்சல பெருமாள் என்ற திருநாமம் .

* இத்தலம் தாயாருக்கு சிறப்பு பெற்ற திவ்ய தேசம் .

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :

சென்னை - திருவள்ளூர் ரயில் பாதையில் திருநின்றவூர் நிறுத்தம் உள்ளது .அங்கிருந்து ஆட்டோவில் செல்லவேண்டும் . கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன . சென்னை மீஞ்சூர் -வண்டலூர் வெளிவட்டை சாலை வழியாகவும் செல்லலாம் .


இவூரில் உள்ள பிற கோயில்கள் :

1.  அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருகோயில்
https://ganeshnlr.blogspot.com/2018/07/sri-hrudayaleeswarar-temple.html


2. ஸ்ரீ ஏரிகாத்த ராமர் சன்னதி 


அருகில் உள்ள கோவில்கள்  :











29.6.18

Sri Thiruvikrama Narayanar Temple, Sirkali

அருள்மிகு திருவிக்ரம நாராயண பெருமாள் - சீர்காழி 




மூலவர் - திருவிக்ரமன் , தாடாளன் 

தாயார் - லோகநாயகி ,மட்டவிழ் குழலி 

உற்சவர் - திருவிக்ரம நாராயணர் 

கோலம் - நின்ற கோலம்


*  திவ்ய தேசங்களில் 28 வது  திருத்தலம் 
* திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்தார் 
*  இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .
* உரோமச முனிவரின் ஆசையை பூர்த்தி செய்ய இறைவன் தன் இடது காலை தூக்கி திரிவிக்ரம அவதாரத்தை காட்டியுள்ளார் . ஆதலால் இவுருக்கு தாடாளன் என்ற பெயரும் உண்டு .

* திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரை பாராட்டி தமது தண்டை மற்றும் வேலை பரிசாக அளித்த தளம் 

* தாயார்  லோகநாயகி என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் மற்றும் இறைவன் தாயாரை தன் மார்பில் தாங்கியவாறு காட்சி தரும் தலம் .


இருப்பிடம் மற்றும் நேரம் :

அருள்மிகு திருவிக்ரம நாராயணர் திருக்கோயில் 
விண்ணகரம் ,சீர்காழி -609110
நாகப்பட்டினம் மாவட்டம் 

தரிசன நேரம் :

காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை 
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

போக்குவரத்து :

சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் சீர்காழி அருகில் பேருந்து நிலையத்திலிருந்து 2 km முன்னதாகவும் , சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1km தொலைவிலேயும் உள்ளது .

இக்கோவிலின் அருகில் 1 km தொலைவில் பாடல் பெற்ற சிவத்தலத்தில் ஒன்றான அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது மேலும் விவரங்களுக்கு கிழே உள்ள link ஐ அழுத்தவும்
Sri Sattainathar Temple, sirkali

please click for more details 


23.5.18

Arulmigu sthala Sayana Perumal Temple, Mamalapuram

அருள்மிகு தல சயனப் பெருமாள் திருக்கோயில் 

திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் )




மூலவர் - தலசயன பெருமாள் 

தாயார் - நிலமங்கை  தாயார் 

உற்சவர் - உலகுய்ய நின்ற பெருமாள் 

கோலம் -  சயனம் 

தீர்த்தம் - புண்டரீக புட்கரணி , கருட நதி 

மங்களாசனம் - பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் 

* 108 திவ்யதேசங்களில் 63 வது திவ்யதேசம் ஆகும் 

* 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது 

தல வரலாறு 



புண்டரீக முனிவர் பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தி பெருக்கால் குளத்தில் உள்ள தாமரை மலர்களை கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார் .பறித்த பூக்களை கூடையில் இட்டு கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது ,குறுக்கே கடல் இருந்தது ,பக்தி பெருக்கால் தன் இரண்டுகைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார் . அண்ணம் அகாரம் இன்றி இதையே செய்துகொண்டிருந்தார் . இதை கண்டு ஆனந்தம் ஆனந்தம் கொண்ட இறைவன் முதியவர் வேடம் இட்டு காரணம் கேட்டார் . அதற்கு புண்டரீக முனிவர் பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாக கூறினார் . உடனே முதியவராக வந்த இறைவன் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் உம்மோடு சேர்ந்து இறைப்பதாக கூறினார் . உடனே முனிவர் மகிழ்ந்து விரைவாக இரண்டு பேரும் இறைக்கலாம் என்று எண்ணி உணவு தயார் செய்ய சென்றார் ,உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் முதியவர் முகுந்தனாக சயனித்திருந்தார் . அதிர்ந்து போன முனிவர் ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தி தான் பறித்து வைத்த தாமரை மலர்களை சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தை பெற்றார் . இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால்  "தல சயன பெருமாள் "என்று அழைக்கப்படுகிறார் .

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன் ,திருமால் தலத்தையே திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்ததாக தெரிகிறது .


பூதத்தாழ்வார் 

பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்த திருத்தலம் .

*  பெருமாள் தரை தலத்தில் சயனித்துள்ள ஒரே திவ்யதேசம் , அதனால இங்கு வந்து  நிலம் வீடு சம்பந்தமாக வேண்டுவார்கள் .
*தாயார் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்துள்ள ஒரே தலம் .
* உற்சவர் தாமரை மலரை ஏந்தியவாறு காட்சி தரும் ஒரே  திவ்யதேசம் .
*திருமகள் பிராட்டி நிலமங்கை தாயார் என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம் .

தரிசன நேரம் & முகவரி 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00மணி வரை 

மாமல்லபுரம் பேருந்து நிலைய அருகிலேயே உள்ளது .
சென்னையிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .




     

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...