29.6.18

Sri Thiruvikrama Narayanar Temple, Sirkali

அருள்மிகு திருவிக்ரம நாராயண பெருமாள் - சீர்காழி 




மூலவர் - திருவிக்ரமன் , தாடாளன் 

தாயார் - லோகநாயகி ,மட்டவிழ் குழலி 

உற்சவர் - திருவிக்ரம நாராயணர் 

கோலம் - நின்ற கோலம்


*  திவ்ய தேசங்களில் 28 வது  திருத்தலம் 
* திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்தார் 
*  இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .
* உரோமச முனிவரின் ஆசையை பூர்த்தி செய்ய இறைவன் தன் இடது காலை தூக்கி திரிவிக்ரம அவதாரத்தை காட்டியுள்ளார் . ஆதலால் இவுருக்கு தாடாளன் என்ற பெயரும் உண்டு .

* திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரை பாராட்டி தமது தண்டை மற்றும் வேலை பரிசாக அளித்த தளம் 

* தாயார்  லோகநாயகி என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் மற்றும் இறைவன் தாயாரை தன் மார்பில் தாங்கியவாறு காட்சி தரும் தலம் .


இருப்பிடம் மற்றும் நேரம் :

அருள்மிகு திருவிக்ரம நாராயணர் திருக்கோயில் 
விண்ணகரம் ,சீர்காழி -609110
நாகப்பட்டினம் மாவட்டம் 

தரிசன நேரம் :

காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை 
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

போக்குவரத்து :

சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் சீர்காழி அருகில் பேருந்து நிலையத்திலிருந்து 2 km முன்னதாகவும் , சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1km தொலைவிலேயும் உள்ளது .

இக்கோவிலின் அருகில் 1 km தொலைவில் பாடல் பெற்ற சிவத்தலத்தில் ஒன்றான அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது மேலும் விவரங்களுக்கு கிழே உள்ள link ஐ அழுத்தவும்
Sri Sattainathar Temple, sirkali

please click for more details 


No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...