28.6.12

 என் நினைவின் எச்சங்கள் !

காதல் 
என் வாழ்கையில் அவ்வப்போதும் வந்து போகும் ஒரு வசந்தம் .என் சிறுவயதில் இருந்து ஒரு அழகான பெண்னை பார்த்தால் என் 
மனதிற்குள் ஒரு இன்பம் .நாம் போகும் ரயிலில் , பஸில் யாராவது ஒரு அழகான பெண் இருந்தால் நம் மனதில் ஒரு பூரிப்பு மத்தாப்பாய் தோன்றும் .
நான் பயணம் செய்யும் பெட்டில் நமக்கு ஒத்த வயதுடைய பெண்ணின் பேரை கண்டால் என் மனம் மகிழ்ச்சி கொள்ளும் .ஆனால் நான் இன்றுவரை யாரையும் 
காதலிக்கவில்லை .ஆனால் நான் பெண்னை பற்றி கவிதை எழுதினேன் அது எப்படி சாத்தியமானது என் மனதிற்குள் அவளை உருவகபடுத்தி கொண்டதாலா !
நன்றாக துங்கினேன்,சாப்பிட்டேன் ஆனாலும் நான் காதலித்தேன் ? எதை என் வாழ்க்கையை !   

29.5.12

சாக்கு

சாக்கு

நம்ம இந்தியாவில் நான்கு லச்சம் குழந்தைகள் பிறந்த இருபத்திநான்கு மணி நேரத்தில் இறந்து விடுகின்றன என்று சர்வதேச அமைப்பான
சேவ் எ சில்ட்ரன் கூறுகிறது .நம்மை விட மோசமான நிலைமை உள்ள ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை .இந்தியாவில் ஒவ்வரு 
ஆண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டு லச்சம் பேர் இறகின்றனர் .ஒரு மணி நேரத்தில் நாற்பத்தி ஐந்து குழந்தை பிறந்து இறக்கிறார்கள்.
இவை எல்லாவற்றிக்கும் மூல காரணம் உண்ண உணவு இல்லை என்பதுதான் .ஆனால் நம்ம அரசாங்க சேமிப்பு கிடங்கில் வீணாக போகும் உணவு தானியத்தின் 
அளவு பல கிலோவுக்கு அதிகம் .அவைகளை எலி மற்றும் பறவைகள் சாபிட்டு வீன்னடிகின்றன .நாம அரசாங்கத்தால் அதை பாதுக்காக ஒரு சாக்கு கூட இல்லை என்று சாக்கு போக்கு சொல்லுகிறது .அவர்களுக்கு மனிதனின் உயிரை விட பணம் மற்றும் பதவி தன முக்கியம் .ஒரு சாக்கு கூட வாங்க வக்கு இல்லாத இந்த திருநாட்டை கண்டு பெருமை கொல்வதா! இல்லை நம்ம அரசியல்வாதிகளை கண்டு மனம் வேதனை படுவதா! தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தனை ஒழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி .

10.5.12

வழக்கு எண் 18/9


கிராமங்களின் விவசாயம் செய்யமுடியாமல் வறுமையில் வாடும் விவசாய குடும்பங்களின் 
இன்றைய நிலமை,குடும்ப நிர்பந்தத்தால் சிறுவயதில் படிக்க முடியாமல் சொந்த ஊரை விட்டு
பிழைப்புக்காக நகரத்துக்கு நகர்ந்து அல்லல்படும் இன்றய இளைஞர்களின் நிலைமயை அழகாக 
எடுத்துள்ளனர் .

நகரத்தில் நடக்கும் ஏழை  பணக்காரர்களின் பாகுபாடு மற்றும் பகட்டு வாழ்க்கையில் சீர்கெட்டு 
போகும் இன்றைய  இளைஞர்கள் அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விபரீதங்கள் 
இவைகளை மிக தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர் .

நமது இந்தியா சட்டம் என்றும் பணக்காரர்களுகே அவைகள் ஏழைக்கு என்றும் எட்டா இடமே .
சட்டம் என்றும்  பணக்காரர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் மட்டும் வளைந்து கொடுக்கும் 
   ஏழை வய ற்றை அது உதைக்கும்.

இன்றைய காவல் அலுவலங்களில் நடக்கும் அவலங்களை இந்த படம் தோலுரித்து காட்டுகிறது .எந்த 
குற்றம் நடந்தாலும் அதனை விசாரிக்கும் காவலர்கள் அதை பணத்தின் தன்மை பொறுத்தே அவர்களின் 
விசாரணை மற்றும் தண்டனை ஆகியவை அமைகின்றன .அவர்கள் குற்றங்களை குறைப்பதை காட்டிலும் 
பணத்தை பெருக்குவதற்குத்தான் நாட்டம் அதிகம் உள்ளது .அவர்கள் போல் உள்ளவர்களுக்கு இந்த படம் 
ஒரு சாட்டை அடி .இயக்குனருக்கு எங்களுடைய ஒரு பூச்செண்டு. 

4.5.12

கரு(ல்)அறை

கரு(ல்)அறை

என் அம்மாவின் கருவறையே
எனது இனிய இல்லம் !

அவளின் தொப்புள் கொடியே
எனக்கு தூலி!

அவளின் சுவாசமே 
எனக்கு உணவு !

அவளின் கணவுகளே
எனக்கு உயர்மூச்சு !

அவளின் சிரிப்பே  
எனக்கு பலம் !

பத்து மாதம் கழிந்து பத்திரமாய் வந்தேன்
அம்மாவின் வயிற்றிலிருந்து...!

வெளிச்சத்திற்கு  வந்தேன் 
அவள் என்னை கொன்று 
அவள் வெளிச்சமானாள்...!

இதில் எனது குற்றம் 
நான் பெண்ணாய் பிறந்ததாலா!

இந்த சமூகத்தின் பிழையில் 
எனது மரணம் தான்
தீர்வா !!

எனது கருவறை யி ன் 
கண்ணீர் அவர்களை 
திருத்தட்டும்!! 

10.4.12

நினைவின் எச்சங்கள்

டெண்டுகொட்டகை

அப்ப எல்லாம் நாம படம் பாக்க போறதுனால ஒரே கொண்டாட்டம்தான் .50 பைசா கொடுத்து தரைல மண்ணை குவிச்சி
அது மேல   உட்காந்து விசில் அடிச்சிக்கிட்டு எதிர்
உள்ளவங்க  மண்ணை  எல்லாம் சரிசிவிட்டு படம் பார்க்குறது ஒரு இண்பமான அனுபவம் .
படம் பாக்கும் போது  முறுக்கு எல்லாம் வாங்கி தின்றுகொண்டு படம் பாப்போம். இப்ப அந்த டெண்டுகொடகை எல்லாம் காணாமல் போயிடிச்சு.

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...