10.5.12

வழக்கு எண் 18/9


கிராமங்களின் விவசாயம் செய்யமுடியாமல் வறுமையில் வாடும் விவசாய குடும்பங்களின் 
இன்றைய நிலமை,குடும்ப நிர்பந்தத்தால் சிறுவயதில் படிக்க முடியாமல் சொந்த ஊரை விட்டு
பிழைப்புக்காக நகரத்துக்கு நகர்ந்து அல்லல்படும் இன்றய இளைஞர்களின் நிலைமயை அழகாக 
எடுத்துள்ளனர் .

நகரத்தில் நடக்கும் ஏழை  பணக்காரர்களின் பாகுபாடு மற்றும் பகட்டு வாழ்க்கையில் சீர்கெட்டு 
போகும் இன்றைய  இளைஞர்கள் அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விபரீதங்கள் 
இவைகளை மிக தெளிவாக காட்டியுள்ளார் இயக்குனர் .

நமது இந்தியா சட்டம் என்றும் பணக்காரர்களுகே அவைகள் ஏழைக்கு என்றும் எட்டா இடமே .
சட்டம் என்றும்  பணக்காரர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் மட்டும் வளைந்து கொடுக்கும் 
   ஏழை வய ற்றை அது உதைக்கும்.

இன்றைய காவல் அலுவலங்களில் நடக்கும் அவலங்களை இந்த படம் தோலுரித்து காட்டுகிறது .எந்த 
குற்றம் நடந்தாலும் அதனை விசாரிக்கும் காவலர்கள் அதை பணத்தின் தன்மை பொறுத்தே அவர்களின் 
விசாரணை மற்றும் தண்டனை ஆகியவை அமைகின்றன .அவர்கள் குற்றங்களை குறைப்பதை காட்டிலும் 
பணத்தை பெருக்குவதற்குத்தான் நாட்டம் அதிகம் உள்ளது .அவர்கள் போல் உள்ளவர்களுக்கு இந்த படம் 
ஒரு சாட்டை அடி .இயக்குனருக்கு எங்களுடைய ஒரு பூச்செண்டு. 

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...