22.11.17

Narasimhar Temple- Singarkudi / Singirikudi

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் - சிங்கர்குடி  / சிங்கிரிக்குடி 

மூலவர் 

மூலவர் : நரசிம்மர் 

தாயார் : கனகவல்லி தாயார் 

தீர்த்தம் : ஜமத் கனி, இந்திரா ,பிறகு வாமன மற்றும் கருட தீர்த்தம் என                           ஐந்து வகை தீர்த்தம்  

விருச்சகம் : வில்வம் 

ராஜகோபுரம் 

தல பெருமை :

இத்தலம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது . இங்கு நரசிம்மர் 16 கைகளுடன் மேற்கு பார்த்து வீற்றியிருக்கிறார் . நரசிம்மர் தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக  மேற்கு திசையை நோக்கியவாறு இரணியனை வதம் செய்தார் அந்த பிரமாண்ட உருவத்துடன் 16 கைகளுடன் மிக உக்கிரமாக காட்சி அளிக்கிறார் . மற்றும் இடது புறத்தில் இரணியனின் மனைவி நீலாவதி வலது புறத்தில் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள் மற்றும் வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர்,பால நரசிம்மர் வீற்றியிருக்கிறார்கள் .ஒரே இடத்தில 3 நரசிம்மர்கள் காட்சி கொடுப்பது மிக அரிது.

நரசிம்மர் தன் 16 கைகளில் பதாகஹஸ்தம் ,பிரயோக சக்ரம் ,குத்து கத்தி ,பானம் ,வில் ,சங்கு ,கதை ,கேடயம் ஆகியவற்றைகளையும் மற்ற கரங்களில் இரணியன் சம்ஹரமான குடலை கிழிப்பது ,மாலையாய் பிடித்திருத்தல் ,இரணியனின் தலையை அழுத்தி பிடித்தல் ஆகியவற்றுடன் காட்சி அளிக்கிறார் .
நுழைவாயில் 

தல சிறப்பு :

நரசிம்மர் உக்கிர கோலத்தில் லக்ஷ்மியை மடியில் வைத்தோ அல்லது யோக நிலையிலோ எல்லா கோவில்களிலும் காணலாம் ஆனால் இங்கு அவர் 16 கைகளுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிரமாக காட்சி கொடுக்கிறார் .
ஒரே தலத்தில் 3 நரசிம்ஹர் காட்சி கொடுக்கும் தலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது .

பொது :

இத்தலத்தில் 5 நிலை கோபுரம் ,கனகவல்லி தாயார் ,ராமர் ,16ஆழ்வார்கள் ,விநாயகர் ,ஆஞ்சநேயர் ஆகியவர்கள் தனி தனி சன்னதியில் வீற்றியுள்ளார்கள் .

நரசிம்மரை வேண்டினாள் கடன் பிரச்சனை ,மனநலம் பாதித்தவர்கள் ,குழந்தை வரம் ,எதிரிகளால் வரும் தொல்லை ஆகியவற்றிகளுக்கு வேண்டி செவ்வாய் கிழமைகளில் மற்றும் ஸ்வாதி நட்சத்திரம் அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் .

 செல்லும் வழி :

எல்லாரும் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய தலம் இது . ஒரே நாளில் சிங்கர்குடி ,பூவரசன் குப்பம் பூவரகன்  ,பரிக்கல் நரசிம்மர் தரிசிப்பது மிக சிறப்பு இவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் மிக அருகிலேயே அமைந்துள்ளது .


சிங்கர்குடிக்கு பாண்டிச்சேரியிலிருந்து 10 km தூரம் கடலூர் செல்லும் வழியில் தவளக்குப்பம் என்ற இடத்தில இறங்கி ஆட்டோவில் இக்கோவிலுக்கு செல்லவேண்டும் .கடலூரில் இருந்தும் பாண்டிச்சேரி போகும் வழியில் இறங்கி செல்லலாம் .நிறைய பேருந்து வசதிகள் உள்ளது 

கோவில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 முதல் 12 வரை , மாலை 4.30 முதல் 9.30 வரை 
இக்கோவில் கடலூர் மாவட்டத்தை உள்ளடங்கியது .

More details about this temple:



This is a Nrusimha Khsetra, situated about 3kms west of Abhishekapakkam road junction of Pondicherry--Cuddalore Road.

This holy place is at a distance of about 15 kms from Pondicherry.

This temple dedicated to Sri Nrusimha belong to Chola period,identified as AYIRRUR of ALWAR of Singavezhkundram(1051 A.D.)

There were stone inscriptions in the temple which describe the donations offered by Chola Kings , Sri Krishnadevaraya etc to Sri Nrusimha.

Sri Nrusimha is giving dharsan with 16 hands( thirukkarams )in a gigantic posture.
You could see Neelavathi, wife of Hiranyakasibu, threeASuras, Prahladha , Sukracharya, Vasishta in the lower east of the pedastal. 
Sri Devanathan , the presiding deity of Thiruvaheendrapuram is giving dharsan here as Sri Nrusimha. 

Sri Thirumangai Azhvar says that SRi Nrusimha is there at Thiruvaheendrapuram as Sri Devanatha.
Markandeya purana describes this holy Khsetra in Nrusimha vana purana. 
There is Brindavan for 4th Peedathipathi of Sri Ahobila Mutt here

Thanks To Mr. Saranathan Lakshminarasimhan for the above content 

19.11.17

Tiruvetteeswarar Temple- Chennai

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் -திருவட்டீஸ்வரன் பேட்டை -சென்னை 



மூலவர் - திருவேட்டீஸ்வரர் 

அம்பாள் - செண்பகவல்லி தாயார் 

தல விருச்சம் - செண்பக மரம் 

பழமை          - 1000 வருடங்கள் 

தீர்த்தம் -  செண்பக தீர்த்தம் 

தல சிறப்பு :



இலக்குமி அம்மையார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .
திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயை கைபிடித்ததால் பார்த்தசாரதிக்கு இது வேட்டகம் -மாமியார் வீடு ஆனதால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது .


ராகு கேது பரிகார தலமாகவும் கருதப்படுகிறது 
இக்கோவிலின் தூணில் மகாலக்ஷ்மி கலசத்துடன் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பம் உள்ளது . விநாயகருக்கு தனி சன்னதி எதிரே அமைந்து உள்ளது. இங்கு உள்ள சரஸ்வதிக்கு வீணை கிடையாது . சிவன் சுயம்புவாக காட்சி தருகிறார் .

அமைவிடம் :

திருவல்லிகேணி ஜாம் பஜார் உள் பக்கத்திலிருந்தும் ஸ்டார் தியேட்டர் எதிர் சந்திலிருந்தும்  இக்கோவிலுக்கு செல்லலாம் . இங்கிருந்து பார்த்த சாரதி கோவில் மிக மிக அருகிலேயே உள்ளது .

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 மணி முதல் 11.00 வரையும் 
மாலை 5.00 முதல் 9.00 மணி வரை 

முகவரி :

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில் 
திருவேட்டீஸ்வரன் பேட்டை , சென்னை -5
044-28418383


11.11.17

Vaidyanathar Temple- Vaitheeswaran Koil

வைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில்

 








ஆதி வைத்தியநாதர் மற்றும் தல விருச்சம் 


மூலவர் - வைத்தியநாதர் 

தாயார் - தையல்நாயகி 

தலவிருச்சகம் - வேம்பு 

தீர்த்தம் - சித்தாமிர்தம் 

பழமை - 2000 வருடங்கள் முற்பட்டது 

மறுபெயர் - புள்ளிருக்குவேளூர் 

தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் .





தன்வந்திரி ஜீவ சமாதி 

தல சிறப்புக்கள் :



வைத்தியநாதர்  :

இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . இக்கோவிலில் எல்லா நவகிரகங்களும் ஈசனின் பின்புறத்தில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர் .ஈசனுக்கு அடங்கி நவகிரகங்கள் உள்ளதால் ஈசனை வணங்குவர்களின் கிரக பலனை சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி செய்கிறார் .வைத்தியநாதர் மருந்தை தினமும் சாப்பிட்டுவந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு . இங்குள்ள மரகத லிங்கம் சிறப்பு வாய்ந்தது .

தையல்நாயகி :

தையல்நாயகிக்கு  புடவை சாத்துதல் ,அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு  செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது . மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள் .இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் நீங்கும் .

செல்வமுத்துகுமார் :

இவருக்கு அர்த்தசாமபூஜை ரொம்ப விசேஷமானது .இரவு 9 மணிக்கு நடக்கும் பூஜையில் புனுகு ,பச்சை கற்பூரம் ,சந்தனம் ,எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம் ,பால் அன்னம் வைத்து பூஜை செய்வர் . இந்த சந்தனம் மற்றும் திருநீறு நோய் தீர்க்கவல்லது .இங்கு முத்துகுமாரரே முதன்மையாக உள்ளதால் காலை மற்றும் அர்த்தஜாம பூஜை முதலில் இவருக்கு செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும் . இங்கு எல்லா விழாக்களும் முருகனுக்கே நடக்கிறது .

அங்காரகன் (செவ்வாய் )

இங்கு அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது . செவ்வாய் தோஷத்தால் தடை பட்ட திருமண தோஷங்கள் ,கடன் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் ,நிலம் பிரச்சனைகள் ஆகியவை இவரை வணங்கினால் தீரும் . செவ்வாய் கிழமைகளில் இவர் ஆடு வாகனத்தில் எழுந்தருள்வார் . 

சித்தாமிர்த தீர்த்தம் :

இத்தல சிவனை சித்தர்கள் அமிர்தத்தால் அபிசேகம் செய்து பல வரங்களை பெற்றனர் அவ்வாறு செய்கையில் ஒரு துளி அமிர்தம் இக்குளத்தில் விழுந்ததால் இக்குளத்திற்கு சித்தாமிர்த குளம் என்று அழைக்கப்பட்டது .இக்குளத்தில் நீராடினால் உடலில் உள்ள அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம் .இக்குளத்தில் 18 தீர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .சதானந்த முனிவரின் சாபத்தால் இக்குளத்தில் தவளை மற்றும் பாம்புகள் இருப்பதில்லை .

திருச்சாந்து :

இங்கு புற்று மண் ,அபிசேக தீர்த்தம் ,வேப்ப இலை ,அபிசேக சந்தனம் ,அபிசேக திருநீறு இவைகளை கொண்டு திருச்சாந்து உருண்டை தயார் செய்யப்படுகிறது .இதை வாங்கி சாப்பிட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு .தோல் வியாதிகளுக்கு இங்கே கொடுக்கப்படும் புனுகு எண்ணையை தேய்த்து நீராடினால் குணமாகும் . இக்கோயில் 4448 நோய்களை தீர்த்துவைக்கும் தலைமை பீடம் இது .தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அடைந்த இடமும்கூட .

சடாயுகுண்டம் :


சடாயுகுண்டம் 



சடாயுவின் வேண்டுதலின் படி ராமபிரான் விபூதி குண்டலத்தில் சிதையடுக்கி சடாயுவின் உடலை இட்டு தகனம் செய்ததால் இவ்விடம் சடாயுகுண்டம் என்று அழைக்கப்படுகிறது .

இத்தல பெருமைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் இது .

மற்றும்  பல மாநிலத்தவரின் குலதெய்வம் என்பதால் தினமும் இங்கே மொட்டை அடித்தல் ,காது குத்துதல் மற்றும் திருமணங்கள் நடை பெறுகின்றனர் .இத்தலத்தில் ஓலை சுவடி ஜோசியம் ரொம்ப பிரபலமானது .

இத்திருக்கோயில் திருக்கைலாய தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமானது .

செல்லும் வழி :

இது நாகப்பட்டினம் மாவட்டதில் மயிலாடுதுறை அருகில் உள்ளது .சிதம்பரம் நடராசரை தரிசனம் செய்துவிட்டு வைத்தியநாதரை தரிசனம் செய்யலாம்.
நிறைய தங்கும் விடுதிகள் இங்கே உண்டு . மொட்டை அடித்தால் சுடு நீர் அருகிலேயே குறைந்த பணத்திற்கு தருகிறார்கள் . சாப்பிட ஒரு ஐயர் மெஸ் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் மிக உயர் தரமான சைவ ஹோட்டலுடன் கூடிய அழகிய தங்கும் விடுதி "சதாபிஷேகம் " என்ற பெயரில் உள்ளது .  விடுதியின் விவரம் பின் வரும் லிங்கை அழுத்தவும் .


திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 11 வரை , மாலை 4 மணி முதல் இரவு  8.30 வரை 

If you need to English please click following link





4.11.17

yoga Narasimhar Temple- Velachery

யோக நரசிம்மர் ஆலயம் - வேளச்சேரி 

vazipokkan



மூலவர் : ஸ்ரீ  யோக நரசிம்மர் 
தாயார் :ஸ்ரீ அமிர்தபாலவல்லி 

இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது . இத்தலம் சோழர் காலத்துக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது . இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . அண்மையில் தான் இந்த ஆலயம் மிக அழகாக பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷகம் நடத்தப்பட்டது .

vazipokkan



கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் மேற்கிலும் ஒரு நுழைவாயில் உள்ளது .அமிர்தபாலவல்லி தாயார் வலது புறத்தில் தனி சன்னதி உள்ளது அவர் கிழக்கை நோக்கி உள்ளார் . நுழைவாயிலின் இடது புறத்தில் சக்கரத்து ஆழ்வார் ,கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியவர்கள் தனித்தனி சன்னதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர் .

மூலவர் யோக நரசிம்மர் மிக அழகாக கம்பிரமான தோற்றத்துடன் நான்கு கரத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார் . அவரை நாம் பார்க்கும்போதே நம் மனதில் ஒரு விதமான பரவச நிலையை அடைவதை உணரலாம் .

இந்த கோவில் அமைப்பு மற்றும் சுற்று புறத்தில் உள்ள கலை நயமிக்க பாலகர்கள் மற்றும் நரசிம்மருடைய சிலைகளை காண்பதற்கு நாம் கோடி கண்கள் வேண்டும் .

கோவில் செல்லும் வழி
விஜய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து குருநானக்  கல்லூரி மற்றும் தண்டீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7.00-10.30 மற்றும் மாலை 5.00 - 10.30

If you want to read in English please click this link

vazipokkan

vazipokkan

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...