27.8.17

Thandeeshvarar Temple- Velacherry

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் - வேளச்சேரி 




மூலவர் :               தண்டீஸ்வரர்
தாயார் :                 கருணாம்பிகை 
தல விருட்சம்  : வில்வம் 
தீர்த்தம்                : எம தீர்த்தம் 

சென்னையில் மிகவும் பரப்பரப்பான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் வசிக்கும் இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் . 

வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் அமைந்து உள்ள பகுதி மிகவும் பழமையாக சிறியதாகவும் உள்ளது .

கருவறையின் கிழக்கில் பிள்ளையாரும் , மேற்கு பகுதியில் அண்ணாமலையரும் வீற்றியிருக்கின்றனர் .

சோமசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்த நான்கு வேதங்களையும் பறித்து சென்றான் அதனை திருமால் மீட்டு வந்தார் , வேதங்கள் அசுரனிடம் இருந்த தோஷத்தை போக்க சிவனை நோக்கி தவம் செய்தனர் சிவன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களின் தோஷத்தை போக்கினார் , வேதங்கள் வழிபட்டதால் 'வேதச்சேரி ' என்று அழைக்கப்பட்டது அதுவே இப்பொது வேளச்சேரி என்று ஆனது .

மார்க்கண்டையரின் ஆயுளை எடுக்க எமன் கயிறை வீசும் போது அது சிவனின் மீது விழுந்தது ,சிவன் கோபம் வந்து யமனின் பதவியை பறித்தார் ,எமன் தன் பாவத்தை மற்றும் தன் பதவியை பெற பூலோகத்தில் உள்ள இந்த குளத்தில் நீராடி தன் பதவியை திரும்ப பெற்றார் . ஆதலால் இவ் பெருமானை வண்ணங்கினால் தீர்க்க ஆயுளையும் இழந்த பதவியையும் பெறலாம் .

எமன் சிவனை பூஜிப்பதற்காக தண்டத்தை ஊன்றி பூஜை செய்தார் பூஜை முடிந்ததும் திரும்ப தண்டத்தை எடுக்க முடியவில்லை அதுவே தண்டு ஈஸ்வரனாக அமைந்ததால் 'தண்டீஸ்வரர் ' என்ற பெயர் பெற்றதாக கூறுவதுண்டு .


கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.30-11.00
                                                                   மாலை 4.00-8.30

சிறப்பு :
இங்கு சஷ்டியர்திபூர்த்தி செய்யவும் , இழந்த பதவிகளை பெறவும் தகுந்த கோவில் .


25.8.17

Vigneshaver pooja ( கணபதி பூஜை)


கணபதி பூஜை:
விக்னேஸ்வர பூஜை..
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மஙள்ளாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரி ஸமாப்த் யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங் கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணஸ் பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்//பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும். அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.
புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும்(மானஸீகமாவது). புஷ்பம் போடவும்.

20.8.17

Jegannathar Perumal and Thirumalisai Alvar Temple, Thirumazhisai

அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்




சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .




தலபெருமை :

திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .

ஆழ்வார் அவதாரம் :

இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .



14.8.17

Kids Lunch Box- Beetroot Briyani

பீட்ரூட் பிரியாணி (Beetroot briyani)

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி -200 gm 
பீட்ரூட் -1
கரம் மசாலா பொடி 
லவங்கம் ,பட்டை ,முந்திரி ,பிரிஞ்சி இலை ,அன்னாசி பூ 
நெய் -1 spoon 
எண்ணெய் தேவையான அளவு 
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது 

அளவு : நான்கு பேருக்கு 
காலம் : 20 நிமிடம் 

செய்முறை :
முதலில் பாசுமதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் . பீட்ரூட்டை திருவி வைக்கவேண்டும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் லவங்கம், பட்டை, அன்னாசி இலை, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பிறகு அதில் வெங்காயம் போட்டு வதக்கவேண்டும் இதனுடன் தேவையான உப்பை சேர்த்து கிளரவேண்டும், பாதி வதங்கியதும்  இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்ச வாசனை போகும்வரை வதக்க வேண்டும் பின்பு  கரம்மசாலா மற்றும் தனி மிளகாய் பொடி  (தேவைப்பட்டால்) போட்டு வாசனை போகும் வரை வதக்க வேண்டும், அதனுடன் துருவிய பீட்ரூட் போட்டு வதக்க வேண்டும் சிரிது  நேரத்தில் பாசுமதி அரிசியை போட்டு கிளரவேண்டும் பின்பு 1 டம்பளர் அரிசிக்கு 1 1/2 டம்பளர் என்ற கணக்குக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும் .இரண்டு விசில் வந்தவுடன் குக்கரை அணைத்து விடவேண்டும் ,ஆவி முழுவதும் இறங்கியவுடன் நெய்யில் முந்திரி தாளித்து அதில் போடவேண்டும் . இப்பொது குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் பிரியாணி ரெடி .


குழந்தைகள் பீட்ரூட் பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிடாது ஆனால் இதை விரும்பி சாப்பிடும் . பீட்ரூட் உடம்புக்கு ரொம்ப நல்லது மற்றும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்த சோகையிலிருந்து காப்பாற்றும் . வாரத்தின் ஒரு நாள் இதை குழந்தைகளுக்கு கொடுங்கள் .

12.8.17

Vilvaneswarar temple-Nallur

பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் 



நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென்றால் நான் பிறந்து வளர்த்த ஊரின் ஆலயம் இது .எனக்குள் கடவுளின் மேல் நம்பிக்கையும் ஆர்வமும் கிட்டிய தலம் .நான் முதன் முதலில் வணங்கிய எம்பெருமான் என் அம்பலத்தானின் திருமுகம் கண்ட தலம் .

விருத்தாசலம் -வேப்பூர் சாலையில் சென்று கண்டப்பங்குறிச்சி சென்று வடக்கில் நான்கு கிமி செல்லவேண்டும்.கடலூர் மாவட்டத்தில் அமைந்த நல்லூர் என்ற ஊர் ஆகும் . இவ்வூருக்கு 
 தனி சிறப்பு தருவது  மூன்று நதிகள் கூடுமிடமாக அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர். 


              நல்லூர் வில்வவனேஸ்வரர் ஆலயம் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் மேட்டுப் பகுதியான இடத்தில வட மேற்கே அழகுற அமைந்துள்ளது 
  திருக்கோவிலில் கருவறை,அர்த்தமண்டபம் , மகாமண்டபம் ,முகமண்டபம் 



மகா  மண்டபம்:


                இம்மண்டபம் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.

                     "ஸ ஸ்  ஸ்ரீ தனித்த 
                      யாண்ட பஞ்சசதி 
                      தகன அறுபடை 
                      யான சுந்தரபட்ட
                      நான தில்லைநாயக 
                      வேளான் "

என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .


                  கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது. கோபுரம் ,முக மண்டபம் பிற பிற்க்காலத்திய பணிகளாக தோன்றுகிறது.ற அமைப்புடன் அமையபெற்றுள்ளது.
               நுழைவு வாயிலில் கோபுரமும்,  முன்மண்டபங்களும், 
திருமண மண்டபம் காணப்படுகிறது .நந்தி மண்டபம் இறைவனை நோக்கி எழுப்பட்டுள்ளது .

இறைவன் கிழக்கு  நோக்கியும் அவரது இடது புறத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். 

வடக்கு திசை நோக்கிய முருகன் :

இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக  உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம். 
கருவறை சுற்றி சுற்றாலை மண்டபங்கள் உள்ளன அதில் அறுபத்து மூவர் உள்ளனர். பின் புறம் பிராண தியாகர் லிங்கமும், தண்டபாணி, லட்சுமி நாராயணர், மகாலட்சுமி உள்ளனர். 

 கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், மாதவபெருமாள், பிரமன், துர்க்கை உள்ளனர் அது போல் இறைவியின் கருவறை சுற்றி ஞானசக்தி, கிர்ரியாசக்தி, பிரம்மா சக்தி என சிலைகள் உள்ளன.  இறைவியின் முகப்பு மண்டபம் ஒட்டி வீரபத்திரர் தெற்கு நோக்கியுள்ளார்.

 இறைவியின் எதிரிலும் இறைவனின் எதிரிலும் தனி தனி கொடிமரங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சூரியன் உள்ளன. 

இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .

இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும்  இரவு  இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது .இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கி ஈசனை வணங்கியதாக சொல்லப்படுகிறது .

அம்பாள் பாலாம்பிகை வேண்டினாள் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு . உங்களுக்கு கடலூர் மாவட்டம் செல்லும் நேரம் கிடைத்தால் இந்த கோவில் , மிக அருகில் உள்ள விருதை,கொளஞ்சியப்பர் ,ஸ்ரீமுஷ்ணம் வராகர் இவைகளையும் சேர்த்து பார்க்கலாம் .

இறைவன்- வில்வனேஸ்வரர் 
 இறைவி- பிரகன்னாயகி

7.8.17

Plantain stem pachadi (valathandu pachadi)

வாழைத்தண்டு பச்சடி (கேரளா ஸ்பெஷல் )



தேவையான பொருட்கள் :

சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப் 
கடுகு -1 teaspoon 
தேங்காய் - 1/2 மூடி 
சிகப்பு மிளகாய் -5
ப . அரிசி -1 teaspoon 
புளி - 1 நெல்லிக்காய் அளவு 
உப்பு 
மஞ்சள் பொடி 
பெருங்காயம் 
கருவேப்பிலை 

செய்முறை 

புளியை நன்றாக தண்ணீர் விட்டு கரைத்து  அதை வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும் அதனுடன் வாழைத்தண்டு உப்பு,மஞ்சள்  பொடி 
போட்டு அடுப்பில் வைத்து நன்றாக வேக வைக்கவேண்டும் .

மிளகாயை வறுத்து எடுத்து  அதனுடன் தேங்காய்,அரிசி  மற்றும் கடுகை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு கலவையில் போட்டு நன்றாக கிளரி அது நன்றாக இரண்டு நிமிடம் கொதிக்க விடவேண்டும் .பின்பு  அதில் பெருங்காயம் ,கருவேப்பிலை போட்டு இறக்கி வைத்துவிடவேண்டும் .பின்பு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து  போடவும் .

இந்த பச்சடியை சுடு சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் . கேரளா சமையலில் இது மிக சுவையான ஆரோக்யமான சாம்பாருக்கு மாற்றான உணவு ஆகும் .  

6.8.17

Thirumeeyachur Sri Lalithambigai Temple

திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை உடனுறை அருள்மிகு மேகநாதர் திருக்கோவில் 



 தல வரலாறு


அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
  மூலவர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர்,   முயற்சிநாதர் )
   உற்சவர் : பஞ்சமூர்த்தி
   அம்மன்/தாயார் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி
   தல விருட்சம் : மந்தாரை, வில்வம்
   தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி
   ஆகமம்/பூஜை  : -
   பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
   புராண பெயர் : திருமீயச்சூர்
   ஊர் : திருமீயச்சூர்
   மாவட்டம் : திருவாரூர்
   மாநிலம் : தமிழ்நாடு 

திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 56வது தலம்


பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!

தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும்  தலம் திருமீயச்சூர். 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ,

 இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!

இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.

 இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.

எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.

இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள். 

வருடம் முழுவதும், இங்கே கூட்டம், 
மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!

  .


 தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 119 வது தேவாரத்தலம் ஆகும்

இங்கு மூலவர் மேகநாதர். சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.  சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் "மீயச்சூர்' என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசக்ர நாயகி: மூலவர் மேகநாதர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருளுகிறார் அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும்  உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இளங்கோவில் சன்னிதானத்திலுள்ள இறைவனின் திருநாமம் சகலபுவனேஸ்வர். இவர்   மேகலாம்பாளுடன் அருள் செய்கிறார்.

கிளியுடன் துர்க்கை: மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.


"சுகம்' என்றால் "கிளி'. இவள் மகிஷாசுரன் மீது நின்றாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள். இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம். "சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்ற சுலவடை கூட இதில் இருந்து தான் பிறந்தது. இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று  வருவதைக் காணலாம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.


 உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர்.


 இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,"லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?''என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்," "பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,''என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர்,"லலிதா நவரத்தின மாலை' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

இரண்டு லிங்கம்: இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக தி உண்டு என்பார்கள்.




சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான்.


கொலுசு காணிக்கை:  இங்குள்ள லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும், காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். ஒருமுறை அம்பாளின் பக்தை ஒருவரின் கனவில் அம்பாளுக்கு கொலுசு மாட்டுவது போன்ற காட்சி வந்ததாம். அதன்படி பக்தை அம்பாளுக்கு கொலுசு செய்து அணிவித்தார். தற்போது பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள். 


சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளிலில் ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டிய தளம் .

1.8.17

Brinjal rice for kids ( kathirikai satham )

குழந்தைகளுக்கான கத்திரிக்காய் சாதம்


 

தேவையான பொருட்கள் :

 வடித்த சாதம் -1 கப் 
பிஞ்சி கத்திரிக்காய் - 5
தக்காளி -1 
பெரிய வெங்காயம் -1
கடலைப்பருப்பு - 1 spoon 
உளுத்தம்பருப்பு -1 spoon 
கடுகு - தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு 
கரம்மசாலா - 1 spoon 

செய்முறை 

முதலில் சாதத்தை வடித்து தனியாக  எடுத்து கொள்ளவும் .  வாணலில் 3 spoon  எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதனுடன் கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் போட்டு சிவக்கும் வரை வதக்கவும் அதனுடன் தக்காளி ,நறுக்கிய கத்திரிக்காய் போட்டு  நன்றாக வேகும் வரை வதக்கவும் பின்பு அதனுடன் கொஞ்சம் கரம்மசாலா தூள் மற்றும் தேவையான உப்பை போட்டு கிளறவும் ,இந்த கலவையுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும் அப்போது அடுப்பு சிம்மில் இருக்கவேண்டும் . இதனுடன் கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும் . இப்போது குழந்தைகளுக்கு பிடித்த கம கம கத்திரிக்காய் சாதம் ரெடி . கரம்மசாலா போட்டு உள்ளதால் குழந்தைகள்  அந்த மணத்தை பிடித்தே சாப்பிட்டுவிடுவார்கள் .  

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...