Showing posts with label chennai permal temple. Show all posts
Showing posts with label chennai permal temple. Show all posts

8.3.18

Arulmigu Vaikundavasa perumal temple, koyembedu

அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் 

முகப்பு தோற்றம் 




மூலவர் - வைகுண்டவாசர் 

உற்சவர் :  பக்தவச்சலர் 

தாயார் - கனகவல்லி தாயார் 

விருச்சகம் - வில்வம் , வேம்பு 

தீர்த்தம் -  லவசதீர்த்தம் 

புராண பெயர் : குசலவபுரி 





தல சிறப்பு :

*  வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .

* வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர் 

* இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் 

* இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது 

* அனுமன்,லக்ஷ்மணன்  இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .

* கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .

* இங்குள்ள விமானம் சாயா விமானம் .

கோவில் அமைவிடம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது .
காலை  6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு  8.45 வரை .

If you want English please click

2.2.18

Arulmigu Shri Thirukkachi nambigal and Varatharaja Pereumal Temple- Poonamallee

அருள்மிகு ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் - பூந்தமல்லி 

ராஜ கோபுரம் 

இந்த கோவில் ஐந்து கோபுரங்களை கொண்ட அழகிய கோவிலாகும். மற்றும் திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலமாகும். இந்த கோவில் 14 மற்றும் 17 ம் நூற்றாண்டு தோன்றியது ஆகும் அதாவது விஜய நகர் காலம் . இங்குள்ள ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்பா நாயக்கர் உருவாக்கினார் .




கோவிலின் உள்ளே சென்றவுடன் இடது புறத்தில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்கலாம் . கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் , காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் ,திருக்கச்சி நம்பிகள் ஆகியோரை தரிசிக்கலாம் . திருக்கச்சி நம்பிகள் மூன்று பேரையும் ஒருசேர தரிசிக்க எண்ணி அவர் இதை நிர்மாணித்தார் . வலது புறத்தில் புஷ்பக வள்ளி தாயார் வீற்றிருக்கார் .

ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 21 ம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் சூர்ய கதிர்கள் ஸ்ரீ வரதராஜர் முகத்தில் படும் .

திருக்கச்சி நம்பிகள் பிறந்த நட்சத்திரமான மாசி மிருகசீர்ஷம் அன்று அதாவது பிப்ரவரி மாதத்தில் மிருகசீர்ஷம் ஒட்டி 10 நாட்கள் திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும் .



கோவில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம் :

காலை 6.30 முதல் 11.30 வரை 
மாலை 4.30 முதல் இரவு 8.30 வரை 

இத்திருத்தலம் பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தெருவில் உள்ளது .



அருகில் உள்ள திருத்தலங்கள் :

இக்கோவிலின் அருகில் 

1. வைத்தியநாதர் திருக்கோவில் - பூந்தமல்லி 

2. மாங்காடு காமாச்சி  அம்மன் 

3.  வில்லேஸ்வரர் கோவில் -மாங்காடு 

4. வைகுண்ட பெருமாள் கோவில் - மாங்காடு 


20.8.17

Jegannathar Perumal and Thirumalisai Alvar Temple, Thirumazhisai

அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்




சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .




தலபெருமை :

திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .

ஆழ்வார் அவதாரம் :

இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .



Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...