Showing posts with label vaikundavasa perumal. Show all posts
Showing posts with label vaikundavasa perumal. Show all posts

8.3.18

Arulmigu Vaikundavasa perumal temple, koyembedu

அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் 

முகப்பு தோற்றம் 




மூலவர் - வைகுண்டவாசர் 

உற்சவர் :  பக்தவச்சலர் 

தாயார் - கனகவல்லி தாயார் 

விருச்சகம் - வில்வம் , வேம்பு 

தீர்த்தம் -  லவசதீர்த்தம் 

புராண பெயர் : குசலவபுரி 





தல சிறப்பு :

*  வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .

* வால்மீகி மற்றும் லவன் குசன் இங்கு காட்சிஅளிக்கின்றனர் 

* இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் 

* இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது 

* அனுமன்,லக்ஷ்மணன்  இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .

* கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .

* இங்குள்ள விமானம் சாயா விமானம் .

கோவில் அமைவிடம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது .
காலை  6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு  8.45 வரை .

If you want English please click

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...