21.7.18

Sri Thyagaraja swamy, vadivudaiyambigai Temple- Thiruvottiyur

அருள்மிகு வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி திருக்கோயில் - திருவொற்றியூர் 




முகப்பு கோபுரம் 

மூலவர் - படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர் 
தாயார் - வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன் 
விருச்சம் - மகிழம் ,அத்தி 
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம் 
ஆகமம் - காரணம் ,காமீகம் 
ஊர் - திருவொற்றியூர் 
கொடிமரம் 

* இங்கு எல்லாமே இரண்டு சுவாமி ,அம்பாள் ,தீர்த்தம் ,பூஜை ,விருச்சகம் இவை எல்லாமே இரண்டு ஆகையால் இரண்டு என்பது பிரதானமானது 

* தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 253வது தலம் 

* சுயம்பு லிங்கம் ,ஆவுடையார் கிடையாது 

* இங்கு பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார் 

* துர்க்கை காலின் கீழ் மகிஷாசுரன் இல்லை 

* அம்மனின் 51 சக்தி பீடங்கலில் இது இஷி சக்தி பீடமாகும் 

*பிரமனின் விருப்பத்திற்கேற்ப ஈஸ்வரன் மண்ணுலகில் எழுந்தருளிய முதல் திருத்தலம் 
வட்டப்பாறை அம்மன் 

*ஏழாம் நூற்றாண்டில் காளியின் வடிவமாக உள்ள வட்டப்பாறை அம்மனை தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்ட தலம் .

* ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை விளக்கும் திருமூர்த்திகளின் ஓர் வடிவம் பெற்ற தலம் 

* பஞ்சபூத தலங்கள் ஒரே இடத்தில அமைந்த தலம் 

* ஆதிசேஷன் மற்றும் சந்திரன் ஒருங்கே நின்று சிவனை வழிபட்ட தலம் 

* அகத்தியர் இறைவனின் திருமணக்கோலத்தை கண்டு களித்த தலம் .

* இலவன் பிரதோஷ நாளில் சிவனை வழிபட்ட தலம் 

* நந்தியம் பெருமானுக்காக சிவன் பத்மதாண்டவம் ஆடிய தலம் .

*திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம் .

* சுந்தரர் சங்கிலி நாச்சியாரை சிவபெருமான் முன்னிலையில் மணம் புரிந்த சிறப்புமிக்க தலம் .

* ஆதிபுரி  என்பது இவூரின் பழம் பெறும் பெயராகும் 

* அருணகிரிநாதர் ,வள்ளலார் ,பட்டிணத்தார் ,பாம்பன் அடிகளார் போன்ற இருபது அருளாளர்கள் போற்றி பாடிய தலம் 

* தெய்வங்கள் ,முனிவர்கள் ,தேர்வர்கள் மற்றும் ஆறு அரசர்கள் வழிபட்ட தலம் 

*27 நட்சத்திர லிங்கங்களை கொண்ட தலம் 

* திருவொற்றியூரை நினைத்தாலே வினைகள் நீங்கும் .

 அருள்மிகு வடிவுடையாம்பிகை 

வடிவுடையம்மன் கோயில் 

வடிவுடைநாயகியை கண்குளிர கண்டு கைகூப்பி வணங்கினால் நல்ல மனைவியும் ,நல்ல கணவனும் ,நல்ல குழந்தை செல்வமும் கிடைக்கும் .செல்வ செழிப்போடு வாழ்வர் .

இவர்  இங்கு இஷி சக்தி (ஞான சக்தியாக ) அருள்புரிகிறார் . 51 சக்தி பீடங்களில் இத்தளம் இஷி சக்தி பீடமாகும் .

மூவுலகை ஆளுகின்ற அன்னை ஆதி பராசக்தி நம்மவர்களுக்கு தாயக ஆள்கிறார் .இவர் இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி  என முப்பெரும் தேவியாக அருள்பாலித்து வருகிறார் .
சென்னையில் இவர் மூன்று இடங்களில் இவ் சக்திகளாக காட்சிதருகிறார் இவர்களை பவுர்ணமியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வரும் நாளில் ஒரே நாளில் தரிசனம் செய்தல் வாழ்க்கை செம்மயாகவும் ,ஒளிமயமாகவும் விளங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

1. திருவுடையம்மன் -இச்சை சக்தி - மேலூர் (மீஞ்சூர் )-அதிகாலை தரிசனம் 

2. வடிவுடையம்மன் -ஞான சக்தி -திருவொற்றியூர் -உச்சிவேளை தரிசனம் 

3. கொடியுடையம்மன் - கிரியா சக்தி - திருமுல்லைவாயல் -மாலை தரிசனம் 
For more details 

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் 

மத்திய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை 

அருகில் பட்டினத்தார் அடிகளாரின்  ஜீவ சமாதி உள்ளது இந்த இடத்தை பற்றி பின்னர் எழுதிகிறேன் 
நன்றி - தல வரலாறு தொகுப்பு 













No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...