29.6.18

Sri Sattainathar Temple- Sirkali

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் - சீர்காழி 

மூலவர்  : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர் 

தாயார் : பெரியநாயகி ,திருநிலைநாயகி 

உற்சவர் : சோமாஸ்கந்தர் 

தல விருச்சம் : பாரிஜாதம் , பவளமல்லி 

தீர்த்தம்  : பிரம்மதீர்த்தம் முதலாக 22 தீர்த்தம் 

ஊர்  :  சீர்காழி




*  பாடல் பெற்ற தலங்களில் இது 14 வது தலம் 

* திருஞானசம்பந்தர் தோன்றிய இடம் 

* அம்பிகை ஞானசம்பந்தருக்கு ஞான பால் புகட்டிய இடம்  இங்கு இத் திருவிழா சிறப்பாக கொண்டாட படுகிறது . திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி இங்கு உள்ளது .

* பிரம்மன் ,குரு ,கண்ணபிரான் ,ஸ்ரீகாளி ,பராசரர் ,உரோமச முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம் .

* இத்தலத்தில் சிவபெருமான்  குரு ,லிங்கம் ,சங்கமம் என மூன்று மூர்த்தங்களாக விளங்குகிறார் 

* இக்கோவிலில் உள்ள குன்றின் மீது பெரியநாயகி  சமேத பெரியநாயகராக எழுந்தருளிருக்கும் தோணியப்பர் குரு மூர்த்தங்களாக விளங்குகிறார் . 
இவரை ஞானசம்பந்தருக்கு ஞானஉபதேசம் செய்த குரு ஆவர் 

* பிரம்மரால் ஸ்தாபிக்கப்பட்டதே இங்குள்ள மூலவர்  பிரம்மபுரீவரர் .

* இம்மலையின் தென்புறத்தில் சட்டைநாதர் வீற்றியிருக்கிறார் .இரணியது உயிரை மாய்த்த நரசிம்மத்தை பிளந்து அதன் எலும்பை கதையாகவும் ,தோலை சட்டையாகவும் கொண்டு இங்கு காட்சி அளிப்பது சிறப்பு . இதிலிருந்து தானும் விஷ்ணுவும் வேறு இல்லை என்று உணர்த்தினார் .

தோடுடைய செவியன்விடை யேறியோர் 
தூவெண் மதிசூடிக் 
காடுடைய சுடலைப்பொடி பூசியென் 
உள்ளம்கவர் கள்வன் 
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து 
ஏத்த அருள்செய்த 
பீடுடைய பிராமபுரமேவிய 
பெம்மான்இவன் அன்றே 


முகவரி மற்றும் இருப்பிடம் 

சீர்காழி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது ,சிதம்பரத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

ph - 04364-270235

திறந்திருக்கும் நேரம் 
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 
மலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

இங்கிருந்து 1 km அருகில்  திவ்யதேசத்தில் ஒன்றான திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது அதன் விபரம் கீழே உள்ள link  ஐ அழுத்தவும் 







Sri Thiruvikrama Narayanar Temple, Sirkali

அருள்மிகு திருவிக்ரம நாராயண பெருமாள் - சீர்காழி 




மூலவர் - திருவிக்ரமன் , தாடாளன் 

தாயார் - லோகநாயகி ,மட்டவிழ் குழலி 

உற்சவர் - திருவிக்ரம நாராயணர் 

கோலம் - நின்ற கோலம்


*  திவ்ய தேசங்களில் 28 வது  திருத்தலம் 
* திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்தார் 
*  இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .
* உரோமச முனிவரின் ஆசையை பூர்த்தி செய்ய இறைவன் தன் இடது காலை தூக்கி திரிவிக்ரம அவதாரத்தை காட்டியுள்ளார் . ஆதலால் இவுருக்கு தாடாளன் என்ற பெயரும் உண்டு .

* திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாரை பாராட்டி தமது தண்டை மற்றும் வேலை பரிசாக அளித்த தளம் 

* தாயார்  லோகநாயகி என்ற நாமத்தில் காட்சி தரும் திவ்ய தேசம் மற்றும் இறைவன் தாயாரை தன் மார்பில் தாங்கியவாறு காட்சி தரும் தலம் .


இருப்பிடம் மற்றும் நேரம் :

அருள்மிகு திருவிக்ரம நாராயணர் திருக்கோயில் 
விண்ணகரம் ,சீர்காழி -609110
நாகப்பட்டினம் மாவட்டம் 

தரிசன நேரம் :

காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை 
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

போக்குவரத்து :

சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் சீர்காழி அருகில் பேருந்து நிலையத்திலிருந்து 2 km முன்னதாகவும் , சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1km தொலைவிலேயும் உள்ளது .

இக்கோவிலின் அருகில் 1 km தொலைவில் பாடல் பெற்ற சிவத்தலத்தில் ஒன்றான அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் உள்ளது மேலும் விவரங்களுக்கு கிழே உள்ள link ஐ அழுத்தவும்
Sri Sattainathar Temple, sirkali

please click for more details 


23.6.18

Sri Thatheeswarar Temple, Sri Sundararja perumal, Chithukadu (Thirumanam)

அருள்மிகு தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்  மற்றும் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் - சித்துக்காடு (திருமணம் )




மூலவர் : தாத்ரீஸ்வரர் 
தாயார் : பூங்குழலி 

சிறப்பம்சம் :

* இங்கு வசித்த படுக்கை ஜடா முனி சித்தர் மற்றும் பிராணதீபிகா சித்தர் தாங்கள் தவம் செய்ய இங்குள்ள நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினர் . சமஸ்கரத்தில் தாத்ரி என்றால் நெல்லி என்று பொருள் .

* சிறந்த மணம் பொருந்திய வனம் என்பதால் இதை திருமணம் என்று அழைக்கப்படுகிறது . சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்காடு என்றும் அது மருவி சித்துக்காடு என்று அழைக்கப்படுகிறது .






* இங்குள்ள தூண்களில் ஜடாமுனி மற்றும் பிராணதீபிகா சித்தர்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . சுவாச கோளாறு மற்றும் இதய நோயாளிகள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர் .

* சுவாதி நட்சத்திரர் உடையவர்கள் வணங்கவேண்டிய தலம் இது . சுவாதி நட்சத்திரர்க்காரர்கள் தங்கள் திருமண தடைகளை போக்க இங்கு வந்து தீபம் ஏற்றி வணங்குகிறார்கள் .

* இங்கு திருவாதிரை அன்று நடராஜர் மற்றும் சிவகாமி அவர்களுக்கு திருமணம் விமர்சியாக நடக்கும் இத் திருமணத்தை தம்பதியர் தரிசித்தால் ஒற்றுமை ஓங்கும் .

* ஈஸ்வரனுக்கு முன் உள்ள நந்தி சாந்தமாக காட்சி அளிப்பது சிறப்பு அதனால் அவருக்கு மூக்கணாம் கயறு கிடையாது .
மூக்கணாம் கயறு அற்ற நந்தி 


அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் :




மூலவர் : ஸ்ரீ சுந்தரராஜர்  பெருமாள் 

தாயார் : சுந்தரவல்லி தாயார் 

* சிவன் கோயிலுக்கு பின்புறம் இக்கோயில் உள்ளது 

* மூலவர் தன் பெயருக்கு ஏற்றார் போல் சுந்தரமாக காட்சி அளிக்கிறார் 

* ஆனந்த கூத்தாடும் கண்ணனுக்கு தனி சன்னதி உள்ளது 
ஆனந்த கூத்தாடும் கண்னன் 

* கருடக்கொடி சித்தர் இங்குள்ள குளத்திலேயே ஜீவ சமாதி அடைந்துவிட்டார் அவருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது .

* இங்குள்ள ஆண்டாள் அம்மையாரின் தூண்களில் நரசிம்மர் உருவங்கள் மிக அழகாக பொறிக்கப்பட்டுள்ளது .


அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் :







* பெருமாள் கோயில் இருந்து 1 km தூரம் கூவம் ஆற்றின் கரையோரம் சென்றால் மிக சிறியதாக இங்குள்ள சிவ அடியார்களால் புணராமிக்கப்பட்டு மிக சிறப்பாக பராமரிக்கப்படுகிறது . பிரதோஷ நாட்களில் மிக சிறப்பாக நடத்துகிறார்கள் .

* சிறிய கோயில் பிரகாரத்து அருகில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது .


செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :


வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் பூந்தமல்லி இருந்து பட்டாபிராம் போகும் வழியில் திருமணம் என்று பெயர் பலகை இருக்கும் . பட்டாபிராம் இருந்தும் செல்லலாம் .

காலை 8 மணி இருந்து 9.00 மணி  மாலை 5 முதல் 7 மணி வரை . விசேஷ நாட்களில் மாறுபடும் .

இங்குள்ள எல்லா கோவில்களுக்கும் செல்லும் போது முடிந்தவரை நம்மால் தீப எண்ணெய் வாங்கி செல்லவும் .


நிறைவே காணும் மனம் வேண்டும் சிவனே ! அதை நீ தரவேண்டும் 










9.6.18

Sri Mayuranathar Temple, Mayavaram

அருள்மிகு  மாயூரநாதர்  திருக்கோயில் -மயிலாடுதுறை 


மூலவர் : மாயூரநாதர் 
தாயார் : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி 
தலவிருச்சம் : மாமரம் , வன்னி 

# இக்கோவில்  பாடல் பெற்ற தலங்களில் 102வது தலம் . காவேரி தென்கரையில் 39 வது தலம் .

# அம்பாள் மயில் வடிவத்தில் வந்து வழிபட்டார் 

# ஸ்வாமியின் பின் புறத்தில் உள்ள முருகரை அருணகிரிநாதர் பாடியுள்ளார் 

# தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை என்று அழைக்கப்படுகிறார் . கையில் கிளியுடன் காட்சி தருகிறார் .

# இச்சன்னதியில் சந்தன விநாயர் உள்ளார் .இவரை அகத்தியர் வழிபட்டதனால் அகத்திய சந்தன விநாயகர் என்று அழைக்கப்படுகிறரர் .

# கோஷ்டத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு கிளிகள் மற்றும் குரங்குகள் இருக்கும் விசேஷமான அமைப்பு .

# நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது . சிவனின் கௌரி தாண்டவத்தை மயூரதாண்டவம் என்று அழைக்கிறார்கள் .

#  திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள் 

அமைவிடம் :

சென்னை to நாகப்பட்டினம் போகும் வழியில் மயிலாடுதுறை உள்ளது .கும்பகோணத்திலிருந்து 45 நிமிடங்களில் செல்லலாம் . இக்கோவிலுக்கு முன்னாள் 8 km தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் vaitheeswaran kovil   உள்ளது . இவூரின் பேருந்து நிலையத்தில் இருந்து 5 km  அருகில் திருஇந்தளூர் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30வரை  மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . ph : 04364-223779,222345


for more details please click following link 

நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே !அதை நீ தரவேண்டும்
                                திருச்சிற்றம்பலம் 









8.6.18

Sri Veeranarayana Perumal Temple and Shriman Nathamunigal- Kattumannarkoil

அருள்மிகு வீரநாராயண பெருமாள் கோயில் 






மூலவர்  : வீரநாராயண பெருமாள் 

தாயார் :  மரகதவல்லி தாயார் 

சிதம்பரம் அருகில் சுமார் 25 km தொலைவில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிக பரந்து விரிந்து காணப்படும் வீராணம் ஏரியின் அருகில் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் இக் கோவில் அமைந்துள்ளது . 

இவூரின் சுற்றுப்புறங்களில் மிகவும் பழமையான சிவ ஆலயங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்கள் உள்ளது . இவைகள்  இப்போது மிகவும் நலிந்து இருப்பதால் அக் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் .

நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம் 

ஸ்ரீமன் நாதமுனிகள் :

12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற 4000 பாசுரங்களை ஒன்று திரட்டி இசையோடு நாதமுனிகள் இங்கு பாடினார் . இவருடைய இந்த சீரிய முயற்சியாலேயே நம்மால் 108 திவ்ய தேசங்களை கண்டுபிடிக்கமுடிந்தது .

இந்த ஊரின் அருகில் சுமார் 2 km  தொலைவில் குப்பன்குழி என்ற ஊரில் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் சுவாமிகள் அவதரித்தார்கள் 

கோயில் திறந்திருக்கும் நேரம் :

காலை 7 மணி முதல் 12 Pm வரை  மற்றும் மாலை 4 மணி முதல்  இரவு 9 மணி வரை 

phone :04144-262257

for more details please click following link









Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...