9.6.18

Sri Mayuranathar Temple, Mayavaram

அருள்மிகு  மாயூரநாதர்  திருக்கோயில் -மயிலாடுதுறை 


மூலவர் : மாயூரநாதர் 
தாயார் : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி 
தலவிருச்சம் : மாமரம் , வன்னி 

# இக்கோவில்  பாடல் பெற்ற தலங்களில் 102வது தலம் . காவேரி தென்கரையில் 39 வது தலம் .

# அம்பாள் மயில் வடிவத்தில் வந்து வழிபட்டார் 

# ஸ்வாமியின் பின் புறத்தில் உள்ள முருகரை அருணகிரிநாதர் பாடியுள்ளார் 

# தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை என்று அழைக்கப்படுகிறார் . கையில் கிளியுடன் காட்சி தருகிறார் .

# இச்சன்னதியில் சந்தன விநாயர் உள்ளார் .இவரை அகத்தியர் வழிபட்டதனால் அகத்திய சந்தன விநாயகர் என்று அழைக்கப்படுகிறரர் .

# கோஷ்டத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு கிளிகள் மற்றும் குரங்குகள் இருக்கும் விசேஷமான அமைப்பு .

# நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது . சிவனின் கௌரி தாண்டவத்தை மயூரதாண்டவம் என்று அழைக்கிறார்கள் .

#  திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள் 

அமைவிடம் :

சென்னை to நாகப்பட்டினம் போகும் வழியில் மயிலாடுதுறை உள்ளது .கும்பகோணத்திலிருந்து 45 நிமிடங்களில் செல்லலாம் . இக்கோவிலுக்கு முன்னாள் 8 km தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் vaitheeswaran kovil   உள்ளது . இவூரின் பேருந்து நிலையத்தில் இருந்து 5 km  அருகில் திருஇந்தளூர் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30வரை  மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . ph : 04364-223779,222345


for more details please click following link 

நிறைவே கானும் மனம் வேண்டும் சிவனே !அதை நீ தரவேண்டும்
                                திருச்சிற்றம்பலம் 









No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...