2.2.18

Arulmigu Shri Thirukkachi nambigal and Varatharaja Pereumal Temple- Poonamallee

அருள்மிகு ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் - பூந்தமல்லி 

ராஜ கோபுரம் 

இந்த கோவில் ஐந்து கோபுரங்களை கொண்ட அழகிய கோவிலாகும். மற்றும் திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலமாகும். இந்த கோவில் 14 மற்றும் 17 ம் நூற்றாண்டு தோன்றியது ஆகும் அதாவது விஜய நகர் காலம் . இங்குள்ள ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்பா நாயக்கர் உருவாக்கினார் .




கோவிலின் உள்ளே சென்றவுடன் இடது புறத்தில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்கலாம் . கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் , காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் ,திருக்கச்சி நம்பிகள் ஆகியோரை தரிசிக்கலாம் . திருக்கச்சி நம்பிகள் மூன்று பேரையும் ஒருசேர தரிசிக்க எண்ணி அவர் இதை நிர்மாணித்தார் . வலது புறத்தில் புஷ்பக வள்ளி தாயார் வீற்றிருக்கார் .

ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 21 ம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் சூர்ய கதிர்கள் ஸ்ரீ வரதராஜர் முகத்தில் படும் .

திருக்கச்சி நம்பிகள் பிறந்த நட்சத்திரமான மாசி மிருகசீர்ஷம் அன்று அதாவது பிப்ரவரி மாதத்தில் மிருகசீர்ஷம் ஒட்டி 10 நாட்கள் திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும் .



கோவில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம் :

காலை 6.30 முதல் 11.30 வரை 
மாலை 4.30 முதல் இரவு 8.30 வரை 

இத்திருத்தலம் பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தெருவில் உள்ளது .



அருகில் உள்ள திருத்தலங்கள் :

இக்கோவிலின் அருகில் 

1. வைத்தியநாதர் திருக்கோவில் - பூந்தமல்லி 

2. மாங்காடு காமாச்சி  அம்மன் 

3.  வில்லேஸ்வரர் கோவில் -மாங்காடு 

4. வைகுண்ட பெருமாள் கோவில் - மாங்காடு 


No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...