Showing posts with label permal temple. Show all posts
Showing posts with label permal temple. Show all posts

17.12.17

Sri Renganathar Perumal- Adhi Thiruvarangam

ஸ்ரீ ரெங்கநாதர் பெருமாள் - ஆதி திருவரங்கம் 




மூலவர் - ஸ்ரீ ரெங்கநாதர் 

தாயார் - ஸ்ரீ ரெங்கநாயகி 

தீர்த்தம் - சந்திர புஷ்காரணி 

தல விருச்சகம் - புண்ணாக மரம் 

தல பெருமை :



இக்கோயில் 3000 வருடங்கள் முற்பட்ட கோவிலாகும் . இங்கே விட்டிருக்கும் பெருமாள் பெருமாள் ஸ்ரீரங்கம் பெருமாளை விட பெரியவர் ஆவர் அதனால் இவரை பெரிய பெருமாள் என்று அழைக்கிறார்கள் . தமிழகத்தில் உள்ள பெருமாள்களில் பெரிய பெருமாள் ஆவர் .

தல வரலாறு :




இந்த சேஷ்திரத்தின் பெருமை ஸ்கந்தபுராண உத்தரகாண்டத்தில் உமாமகேஸ்வரஸம் வாதத்தில் 301 அத்தியாயம் முதல் 306 வது அத்தியாயம் வரை உதிரரங்க மஹாத்ம்யம் என்ற பெயரில் ஆறு அத்தியாயங்களில் வடமொழியில் கூறப்பட்டுள்ளது .

சோமுகன் என்ற அசுரன் தேவர்களை அழிப்பதற்காக வேதங்களை அபகரித்தான் .இதனால் தேவர்களும் ,முனிவர்களும் கவலை அடைந்து மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர் . மகா விஷ்ணு அவர்களின் கவலைகளை போக்க சமுத்திரத்தில் ஒளிந்திருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசம் செய்தார் .

திருமங்கை அல்வா பெரிய திருமொழியில் 'வொருவதால் ' என தொடங்கும் பத்து பாசாரங்களும் 'ஏழை ஏதலன் ' என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும் 
இத்தலத்தை மங்களாசனம் செய்துள்ளார் என இங்குள்ள கல்வெட்டுகளிலில் காணமுடிகிறது .

அமைவிடம் :

இக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகில் மணலூர் பேட்டை அருகில் ஆதி திருவரங்கம் அமைந்துள்ளது .
இக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும் .

20.8.17

Jegannathar Perumal and Thirumalisai Alvar Temple, Thirumazhisai

அருள்மிகு ஜகந்நாதர் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார்




சென்னையில் உள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் இந்த திருமழிசை தலம் சிறப்பு வாழ்ந்தது . உலகில் திருமழிசையே சிறந்த இடம் என்பது " உலகுமழிசையும் உள்ளுணர்ந்து தம்மில் புலவர் புகழ்கோலால் தூக்க உலகுதன்னை வைத்தெடுத்துப் பக்கம் வலிது " என்ற திருச்சந்தவிருத்தானியானால் அறியப்படுகிறது .




தலபெருமை :

திருப்புல்லானினியில் சயனகோலமும் ,பூரியில் நின்ற கோலமும் இந்த திருத்தலத்தில் வீற்றிருந்த கோலத்தில் இருப்பதால் இத்தலத்தை" மத்திய ஜெகநாதம் " என்று அழைக்கப்படுகிறது .

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார் . அவர்களுக்கு ஜெகந்நாதர் அமர்ந்த நிலையில் காட்சி அளித்தார் .

ஆழ்வார் அவதாரம் :

இவர் இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானின் சக்கரம் அம்சமாக திருவவாதித்தார் . அவதரித்த காலம் : துவாபரயுகம் .
தந்தை பெயர் : பார்கவ மகரிஷி
தாயார் : கனகாங்கி
அருளிக் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி ,திருச்சந்த விருத்தம்
இவர் இவுலகில் எழுந்தருளியிருந்த காலம் : 4700 ஆண்டுகள்
இந்த கோவில் மட்டும் இல்லாமல் இத்திருத்தலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒத்தாண்டேஸ்வரர் மற்றும் வீடறிந்த பெருமாள் கோவில்கள் உள்ளன இவற்றையும் கண்டு இறைவன் அருளை பெறலாம் .
இக்கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .



Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...