Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

4.5.12

கரு(ல்)அறை

கரு(ல்)அறை

என் அம்மாவின் கருவறையே
எனது இனிய இல்லம் !

அவளின் தொப்புள் கொடியே
எனக்கு தூலி!

அவளின் சுவாசமே 
எனக்கு உணவு !

அவளின் கணவுகளே
எனக்கு உயர்மூச்சு !

அவளின் சிரிப்பே  
எனக்கு பலம் !

பத்து மாதம் கழிந்து பத்திரமாய் வந்தேன்
அம்மாவின் வயிற்றிலிருந்து...!

வெளிச்சத்திற்கு  வந்தேன் 
அவள் என்னை கொன்று 
அவள் வெளிச்சமானாள்...!

இதில் எனது குற்றம் 
நான் பெண்ணாய் பிறந்ததாலா!

இந்த சமூகத்தின் பிழையில் 
எனது மரணம் தான்
தீர்வா !!

எனது கருவறை யி ன் 
கண்ணீர் அவர்களை 
திருத்தட்டும்!! 

18.4.11

எனது சிதறல்கள் !!

எனது சிதறல்கள் !!

இறப்பு
ஒரு தலை காதலர்களின்
வழிகாட்டி!

சோகம் -
தோல்வின் பிம்பம் !

கவிதை
மனதின்
திரைக்கதை!

விதவை
சமுதாயத்தில்
தலையாட்டும்
பேதைகள் !

வறுமை
ஏழைகளின் மரபு சொத்து !

தாய்மை
பெண்களின்
வரப்ரசாதம்
கடவுளின்
மறுபிறவி !

கண்ணாடி
நிலையில்லலாததை
அழகு செய்ய
துணை போகும்
குற்றவாளி !

ஹைக்கூ
என்னை பார்த்து
கண்சிமிடிகொண்டே  இருக்கிறது
எங்கள் தெரு
மின்விளக்குகள் !






Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...