26.5.18

Arulmigu Ardhanareeswarar Temple- Tiruchengode

அருள்மிகு அர்த்தநாரீஸ்வர் திருக்கோவில் - திருச்செங்கோடு 

இறைவன் : அர்தநாரீஸ்வரர் / ஸ்ரீ மாதொரு பாகர் 

தாயார் :      ஸ்ரீ பாகம் ப்ரியாள் 




* திருஞானசம்பந்தரரால் பாடல் பெற்ற தலம் .
* பாடல் பெற்ற தலங்களில் 262 வது தலம் .கொங்கு மண்டல தலத்தில் 4 வது தலம் .2000 வருடம் முற்பட்டது 
* இங்கு முருகர் ரொம்ப பிரசித்தமானது .இவர் செங்கோட்டு வேலர் என்று அழைக்கப்படுகிறார் .
* மலை மேல் உள்ள கோவில் . மேலமடா வீதியில் இருந்து பார்க்கும் போது நாகம் போல் காட்சி அளிப்பதால் நாகாசலம் என்னும் பெயர் உண்டு .
* 1200 படிகள் 20 அடி பாம்பு வடிவம் ஒரு இடத்தில உள்ளது . இங்குள்ள 60ஆம் படி சத்தியத்திற்கு விசேஷமானது .இங்கு செய்யப்படும் சத்தியம் நீதிமன்றத்திலும் செல்லும் என்று கூறப்படுகிறது .
* வெள்ளை பாஷானத்தால் ஆன சுயம்பு மூர்த்தி . உளிபடாத விடங்கம் .சதுர பீடம் .
* மூலவர் லிங்க வடிவில்லாத அர்த்தநாரீஸ்வரர் . இதுவும் வெள்ளை பாஷாணம் .
* இவரை வணங்கினால் தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .
* இவூருக்கு கோடிமாடச்செங்குன்றுர் என்ற பெயரும் உண்டு .


கோயில் திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 

அமைவிடம் மற்றும் செல்லும் வழி :

நகரின் மையத்தில் இவ் மலை அமைந்துள்ளது . மலைக்கு செல்ல கோவில் பேருந்து உள்ளது . ஈரோடு மற்றும் நாமக்கல் இருந்து பேருந்து உள்ளது .
இக் கோயிலை தரிசித்து விட்டு நாமக்கல் வந்து ஆஞ்சனேயர் மற்றும் நாமக்கல் நரசிம்மரையும் தரிசிக்கலாம் .

For brief details please refer below links.

Video link








No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...