26.7.17

varalakshmi Viratham

வரலக்ஷ்மி விரதம்

 

பூஜைக்கு வேண்டிய பொருள்கள் 

உதிரி புஷ்பம் 
அக்ஷதை 
சந்தனம் 
குங்குமம் 
சாம்பிராணி 
கற்பூரம் 
வத்தி 
பால் 
தயிர் 

நைவேத்யத்திற்கு --வெற்றிலை ,பாக்கு ,வாழைப்பழம் ,தேங்காய் ,உளுந்துவடை ,சாதம் ,பச்சரிசி இட்லி ,கொழுக்கட்டை , பாயசம் ,நெய் அல்லது மோர் .

நோன்பிற்க்கு சுவற்றில் வெள்ளை அடித்து அம்மன் எழுத வேண்டும். இல்லா விடில் படம் மாட்டிக் கொள்ளலாம் .முதல் நாள் (வியாழன்) மாலை கண் திறந்து சிறு புள்ளி வைத்து வெண்பொங்கல் செய்து முடியாவிட்டில் சாதமாவது வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும் .சொம்பிற்க்கு சுண்ணாம்பு பூசி காவியால் முகம் எழுதவேண்டும்,சொம்பிற்குள் அரிசி 1/4 படி, எலுமிச்சம் பழம் -1,காதோலை கருகம்மணி -1, வெற்றிலை பாக்கு, மஞ்சள், 5 ரூபாய் காசு சொம்பில் போடவேண்டும். சொம்பிற்கு மாங்கொத்து வைத்து தேங்காய் குங்குமம் இட்டு பூவை சாத்தி சொம்பின் கழுத்துக்கு கருகமணி போட வேண்டும். தாம்பாளத்தில் அரிசி கொஞ்சம் போட்டு அதன் மேல் சொம்பை அலங்காரம் செய்து வைத்து ரேழி இருந்து (தாழ்வாரம் வாசல் பக்கம்) கோலம் போட்டு அதன் மேல் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு பூ போட்டு (அக்ஷதை) கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து (ஆரத்தி எடுத்து அதை பூஜை செய்யும் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும்) இருவர் பிடித்து குனிந்த படி பூஜை செய்யும் இடத்தில் கோலம் போட்டு (மனை பலகை) அதன் மேல் வைக்க வேண்டும் பிறகு பூஜை செய்யவும், குத்து விளக்கை ஏற்றவும், பஞ்சினால் மாலை மாதிரி மஞ்சளை தொட்டு கொண்டு வஸ்திரம் செய்யவும், அதை சொம்பின் மேல் போட வேண்டும். ரவிக்கை துண்டு சார்த்தவும்.மஞ்சள் சரடில் பூவை கட்டி வைத்துக்கொள்ள வேண்டும் . மஞ்சள் பிள்ளையார் பிடித்து கொள்ளவும், சொம்பின் பக்கத்தில் தாம்பாளத்தில் எலுமிச்சை பழம் 1, காதோலை கருகமணி 1 வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு தேவையான வற்றை எடுத்து கொண்டு பூஜை செய்யவும். (Refer Varalakshmi nombu book).சரடை  வலது கையில் கட்டவேண்டும் .
பூஜை முடிந்தவுடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.









சாயங்காலம்  சுண்டல் /பழம் வைத்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து அம்மனை அரிசி பானையில் வைக்கவேண்டும் .அறையில் விளக்கு ஏற்றி கதவை சாத்திவிடவும் (சிறிது நேரம் ). எட்டாவது நாள் மறு வெள்ளிக்கிழமை சொம்பில் இருக்கும் அரிசியை சமைக்கும் அரிசியோடு சாதம் வடிக்கவேண்டும் .சொம்பை பலகையில் வைத்து நைவேத்தியம் செய்யவும் .

மறுநாள் காலை ராகுகாலம் இல்லாத நேரத்தில் நெய்வதியம் (சாதம்/பால்/
பழம்)  படைத்தது ஆரத்தி எடுக்கவேண்டும் .

உங்களுக்கு தேவையான விளக்கங்களுக்கு கீழ் உள்ள link ஐ பயன்படுத்திக்கொள்ளவும் .

http://periva.proboards.com/thread/1742

வரலக்ஷ்மி பாடல்களுக்கு கீழ் உள்ள link ஐ பயன்படுத்திக்கொள்ளவும் .https://www.tamilbrahmins.com

https://www.youtube.com/watch?v=omAjLpCuq54

பூஜா பலகாரங்கள் தெரிந்துகொள்ள கீழ் உள்ள link ஐ  பயன்படுத்திக்கொள்ளவும் .
http://traditionallymodernfood.com/index.php/2015/08/27/varalakshmi-vratham-recipes-naivediyum-pooja-recipes/

http://www.chitrasfoodbook.com/2015/08/varalakshmi-vratham-pooja-procedurepuja.html




No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...