11.1.11

pongal

பொங்கல்
தமிழர் திருநாளாம்
தமிழர் அல்லார் கொண்டாடும் நாளாம்!
உழவர் திருநாளாம்
உழவை மறந்தநாளாம் !!

எட்டாத கணீயாய்
வெங்காயம் !
பயிரிட்ட எங்களுக்கும் கிடைக்கவில்லை
ஒரு வெங்காயமும் !!

காய்கறி விலையோ காது தூரம்
பயிரிட்ட எங்களின் வயுறுக்கு அதுவோ ரொம்ப தூரம் !!

பயிர் இட்டோம்
பணக்காரன் புசித்தான் !
பசியை நாங்கள் புசித்தோம் !!

பொங்கல்ளன்று சினத்ரையில் காலை வணக்கம்
வடஇந்திய சகோதரின் ஆங்கில உரையாடல்
கண்கொட்டாமல் பார்த்தான் தமிழன் !!
கெட்டது என்னவோ தமிழ் மட்டும் !

பொங்கியது பால்
அவர்களின் காஸ் அடுப்பில் !
எங்களுக்கும் பொங்கியது
எங்கள் உழைப்பின் மிச்சங்கள்
ஓட்டை பானையில் ...

விளை நிலங்கள் கூறு போட்டு
மாடிகளாய் ஜொலிக்க !
நாம் தின்ன வெங்காயத்தை இறக்குமதி
செய்கிறோம் !!

என்னத்த சொல்ல !எல்லோரும் சொல்றாங்க
உம்.... சூடு கெட்ட நானும் சொல்றேன்
விஷ் யு ஹாப்பி பொங்கல் !!

No comments:

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...